Skip to main content

Posts

சுந்தரிக்கு யார் பொறுப்பு? (சிறுகதை)

சுந்தரிக்கு யார் பொறுப்பு? --------------------------------- 'இந்த நாய்க்கு ஏற்கனவே நியூட்ரலைஸ் பண்ணியிருக்கா , இல்லையா ' வேலை விட்டு வந்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன். இந்த வாட்சப் கேள்வி தூக்கி வாரிப்போட்டது.  இரண்டு மூன்று ஸ்க்ரோலில் விஷயம் தெளிவாகியது. நியூட்ரலைஸ் என்றால் என்ன என்று மனைவியைக் கேட்டேன். விரைநீக்கம் என்றாள்.  கொஞ்சம் நிம்மதி. நான் நினைத்தது சுட்டுத் தள்ளுவது. சுந்தரி பெண் நாயல்லவா ? என்னுடைய சந்தேகம் இதற்கு எப்படி விரை நீக்கம்.  டெஸ்டோஸ்டெரோன் ஆண் தொடர்பான விஷயம் அல்லவா?. சுந்தரியை மனதில் நினைத்தால் எனக்கு ஒரு இளம் பன்றியின் நினைவு எழும், உடலின் சில இடங்களில் மேகம் போல் வெள்ளைத் தீற்றல். மற்றபடி பன்றியைப் போல் குனிந்தவாறு நடக்கும். பின்னால் கை கட்டி நடக்கும் ஒரு மூதாட்டியைப் போல். என் மகளைப் பார்த்து ஓடி வரும். CCTV -ல் படாமல் பிஸ்கட் துண்டு போடுவாள். பிரட் தின்பதில்லை. உணவு போட்டால் தரையில் சோற்றின் தடம் CCTV  காட்டிக் கொடுக்கலாம். அடுத்த அடுத்த கொத்து கொத்தாய் சுந்தரியைப் பற்றிய  வாட்சப்கள்.      'இந்த நாய ஒண்ணா வெளிய விரட...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -3 - எழுத்தை முன்வைப்பது

எழுத்தாளர்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா?  ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது? பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின்  இந்தப் பகுதி  பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ். கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் நிபந்தனைகளுக்கு  உட்பட்டு. என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர்  பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி  உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்)  என்றொரு டாக்டர் இதைச் செய்கிற...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -2 - எழுத்தின் செயல்முறை

'எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா ?'.  அடுத்த பத்து நிமிஷத்திற்குள் இந்த இரண்டு விஷயங்களை எதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். 'எழுதுறது நூறு சதவீதம் இன்ஜினியரிங்...உட்கார்ந்தா அதுவா வரும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் பொய்...வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொல்றது...என்னளவில் எழுத்து ஒரு  தொழில் நுட்பம்..நுணுக்கங்களைக் தெரிந்து கொண்டால் எல்லோரும் எழுத முடியும்.' நானும் நல்ல எழுத்து அரை போத நிலையில் வருவது என்று எண்ணியிருந்தேன். கப்பல் நீரில் மிதப்பது போல். போத நிலையில் எழுத்தாளரின் உணர்ச்சி மேலிடுகிறது. அந்த இடத்தின் பாத்திரங்களின் உணர்ச்சியே அவருள் வர வேண்டும். அவர் எல்லோருக்கும் ஒரே உணர்ச்சியை காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதை எப்படிச் செய்வது என்று சொற்களால்வகுப்பது கடினம். படைப்பாற்றல் தெய்வக் கொடுப்பினையா? கற்றுக்கொள்ளவே முடியாதா?  படிப்பு தான் எழுத்தின் முதுகெலும்பு. அதில் பின்னித்தான் இதயமும், மூளையும், காலும், கையும் ரத்தத்தைப் பெறுகின்றன. நல்ல எழுத்து சுவாசம் என்றால் , வேண்டாத எழுத்து வெளியேறும் சுவாசம். செய்யும் வேலையைப் பொறுத்து உறுப்புகள் ஊட்டம் பெறுகின்றன. நெடுநாள...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 3

நாட்குறிப்பு  - 33/50  நேற்றைய காலை  'லெட்  மீ  மேக் யு லாப் திஸ் மார்னிங்  ' என்றார். உடன் வேலை பார்ப்பவர் , சந்தித்துச்  சிலநாட்கள் ஆகியிருந்தன. அப்படி அவர் சொன்னதுமே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'அவன் கேட்டான் எதைத் தேர்ந்தேடுப்பதென்று...நான் சொன்னேன்.   Ek toh kodhi, doosre khaaj ...samaj gaya   ராமுக்கு தொழுநோய் , இப்போது புதிதாய் அரிப்பு, எதைத் தேர்ந்தேடுப்பது... இல்லை ராமுக்காக நான் சொரிய முடியுமா சொல்லு' சொரிந்து காட்டி கைதட்டி புரளாத குறையாக சிரித்தார். 'இன்னொன்று..ஒரு பையன் அம்மாவிடம் சொன்னான்.  நான் எனக்குப் பிடித்தமாய்  பெண் பார்த்திருக்கிறேன்...நாளை , மூன்று பேரில் என்னவளை நீ கண்டுபிடிக்க வேண்டும் ' அந்த மூவரில் அவளை அம்மா சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். பையன் 'எப்படிம்மா' என்றான். அம்மா சொன்னாள் , 'அவளை மட்டுமே எனக்குப் பிடிக்கவில்லை' ரெண்டாவதைச் சொல்லி சிரித்து மறைந்தார்.  நாட்குறிப்பு  34/50 முடியாத படைப்பு  உலகில் படைப்புக்கு முடிவில்லை. சமைத்தல் என்றால் செய்தல், படைத்தல் என்றும் பொருள் இருக்கிறது....

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 2

நாட்குறிப்பு 21/50 - முதல் அத்தியாயம் எனது அலுவலகம் இருப்பது  நகரின் மையத்தில். எதிரில் கப்பன் பூங்கா , அடுத்த தெருவில் சட்டமன்றக் கட்டிடம். பக்கவாட்டில் கிரிக்கெட் மைதானம், MG ரோடு, சர்ச் ஸ்ட்ரீட். காலையில் எளிதில் தென்படும் காட்சி கல்யாண போட்டோஷூட். குறிப்பாக சர்ச் வீதியிலும் விதான் சௌதாவின் முன்னரும்.  கொஞ்சம் மேல்தட்டு என்றால் சர்ச் வீதி pub-முன் ஷூட்.  மிடில் கிளாஸ் என்றால் இன்றுபோல் விதான்சௌதா முன்னால் , பசவண்ணர் வெண்கலக் குதிரைச் சிலை தெரிய நடக்கும்.  தெரு விளக்குக் கம்பியில் மணமகன் ஒருகால் ஊன்றி நிற்க, பெண் சேலை நுனி பிடித்து நடந்து வர வேண்டும். முதல் மூன்று டேக் தோல்வியில் முடிந்தது. பையன் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். போட்டோக்காரர்கள் விடுவதாக இல்லை , சிக்கலாகத் தெரிந்தது. நான்காவது டேக்கில் மணப்பெண்ணுக்கு முதலில் இருந்த சிரிப்பு இல்லை. நானும் வந்துவிட்டேன், ஷூட்டும் முடிந்திருக்கும் . நாட்குறிப்பு  22/50 ஒரு எறும்பாவது... சாயங்கால ரயில், மேடையில் மண்புழு போல் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. என் போன்ற எறும்புகள் மனதினுள் தள்ளுமுள்ளிற்கு ஆயத்தமாகின. புழு...

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 1

*50 நாள் மொழி விளையாட்டு* "வணக்கம். நேற்று அறிவிப்பதாகச் சொல்லியிருந்த அடுத்தப் பயிற்சி விளையாட்டை இன்று அறிவிக்கிறேன். தலைப்பு: இன்றைய டைரி` நிபந்தனைகள்: 1. அன்றன்று உங்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் முக்கியமானதென்று நீங்கள் கருதும் ஒன்றனைக் குறித்து மட்டும் விரித்து எழுத வேண்டும். நேற்று நடந்தது, என்றோ நடந்ததெல்லாம் கூடாது. அன்றன்று நடப்பவை மட்டும். குறிப்பிடும்படி ஒன்றுமே நடவாத நாள்களில் அன்று சாப்பிட்டது, அன்றைய உறக்கத்தில் வந்த கனவு போன்றவை குறித்தும் எழுதலாம். ஆனால் அடிக்கடி கனவு, உணவு குறித்தே எழுதித் தப்பிக்க நினைக்கக் கூடாது. 2. நீங்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் சம்பவத்தைப் புனைவு மொழியில் எழுத வேண்டும். கட்டுரைத் தொனி வரக்கூடாது. சிறப்பாக எழுதியிருந்தாலும் கட்டுரை மொழியில் இருந்தால் ஏற்கப்படாது. 3. ஒவ்வொரு நாள் குறிப்பிலும் அதிகபட்சம் பதினைந்து முற்றுப் புள்ளிகள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது. 4. ஒவ்வொரு சொற்றொடரிலும் அதிகபட்சம் ஏழு சொற்கள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது. .... -பாரா இன்றைய டயரி - 01/50 1 எழுந்ததும் மனதில் விழுந்த சொல் - பறக்கும் மலை.  அர...