Skip to main content

Posts

Showing posts from December, 2025

அறுசுவை அரசர்

அறுசுவை அரசர்  --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...

திக்குத் தெரியாத காட்டில்

திக்குத் தெரியாத காட்டில் ---------------------------------- கடந்த சில வாரங்களாக வேலை அதிகம். மேலிட வருகை, நன்றி காட்டும் தினம் (தேங்க்ஸ் கிவிங் டே)  வரும் எதிர்பார்ப்பில் ஆட்கள் வேலையை பொட்டணம் கட்டி முடிச்சை மட்டும் போடாமல் விட்டிருப்பார்கள். கேட்டால் கீழே அடியில் கிடக்கிறது, பையை நோண்டி எடுக்க முடியாது, மடிப்பைக் குலைக்க முடியாது , வேற ஆளைப் பார்க்க முடியுமா என்று கேட்பார்கள். லீவுக்கு முன் டேபிள்களை சுத்தமாய் பார்த்துக்கொள்வார்கள். மொத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலை பார்ப்பார்கள் , லீவில் போவார் லீவில் போவார், அவ்வளவே. வேலை ஜாஸ்தி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். சுற்றியுள்ளவர்கள் வேலை, நமக்கு பொறுப்பு என்றாகிறது. வேலையில் அழுத்தம் என்பது இப்போதெல்லாம் பல மடங்கு என எண்ணத் தோன்றுகிறது. நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த போது , எவ்வளவு வேலை இருந்தாலும் வேலையை அங்கேயே முடித்துவிட்டே வர வேண்டும். என்னுடைய முதல் கம்பெனியில் மதியமும் , இரவும் இரண்டு நேரம் உணவுண்டு. இரவில் கட்டணம் கிடையாது. இருந்து வேலையை இழுத்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். என்னுடன் படித்து முடித்து வேலையில் சேர்ந்த இரண்...