Posts

Translate

குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன (ஜென் கதை -2)

Image
குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன ------------------------------------------------------------------- 'எனக்கு, எப்போ 'என்று கேட்டதும், 'பிளம்பிங் சரியா இருந்தா எல்லாம் ஸ்மூத்தா இருக்கும்' என்று மேலாளர் மதிய ஏப்பத்தை வெளியேற்ற முடியாமல் கண்ணாடி அறையில் சொன்னது நினைவில் வந்தது. இந்த வருஷமும் பதவி உயர்வு தள்ளிப் போகும் என்று பால்-வண்ணன் எதிர் பார்த்திருந்தாலும் அவனுக்கு ஏன் என்று பிடிபடவில்லை. பிளம்பிங் பற்றித்தான் ஆபீஸ்-புத்தரிடம் பேச நினைத்தான். வழியில் பார்த்த தூண்கள் , விளக்குகள், கட்டிடங்கள் எல்லாமும் , இலைகளில் ஓடிய நரம்புகள், மரங்களின் ஓங்கிய கிளைகள், வேர்கள் என எல்லாமும் , தன் உடலின் நரம்புகள், எலும்புகள், மூடிய தோல் என்று எல்லாமும் வெறும் குழாய்கள் மட்டுமே என்றே அவனுக்குத் தோன்றின. எப்போதும் யாரோ, எங்கோ ஏதோ ஒரு குழாயைத் தோண்டிப் , பிரித்துப் , புதைத்து என ஏதேனும் செய்து கொண்டே இருந்தார்கள். பிரபஞ்சமே குழாய்களால் கட்டப்பட்டது என்று தோன்றியது. இதில் தான் ஒரு குழாயா இல்லை, அதைப் பிரிப்பவனா என்று அவனுக்குப் புரியவில்லை. 'குருவே , நான் குழா...

பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை -------------------------------------------------------------------------- நேற்று அலுவலகத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் பகுதியாக வேலை பார்க்கும் இடத்தை அலங்கரித்தார்கள். இந்தியாவின் நுழைவாயில் என்ற மையக் கருத்தென ஒரு குழுவின் அலங்கரிப்பு இருந்தது. நுழைவாயிலில் பறக்கும் கொடி, அதை நோக்கி இருந்த ஏவுகணைகள், விமானங்கள். இதன் நடுவில் இருந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர். சுதந்திரத்தின் படிமம் இவ்வாறு தான் நம்மில் பதிந்துள்ளது. அது இதுமட்டும் தானா?, உண்மையில் இந்தியாவின் வெளிநோக்கிய அந்த நுழைவாயில் கல்வி இல்லையா? அன்றும் இன்றும் பட்டம் என்பதும் டிகிரி என்பது நம்முடைய வாழ்வை திருப்பிப் போடுவதாக இருக்கிறது. படித்தால் வேலை கிடைக்காது என்ற ஒரு செய்தித் துணுக்கு இதை எழுத வைத்தது. பெங்களூரின் அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வுகளை ஒட்டி எழுதிய எனது கட்டுரை. இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியுள்ளது. https://madraspaper.com/unemployment-graduates/  

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும் ------------------------------------------------------------------- இன்று ஒரு நொடி இடைவெளியின்றி செய்திகள் 360 பாகையில் நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. நம் உறங்கும் போதும் இரவில் வந்து நமக்காய்த் தேங்கிக் கிடக்கின்றன. நாம் நாளெல்லாம் குறுஞ்செய்திகளில் பேசியபடி இருக்கிறோம்.  தகவல்களை வடிகட்டுவதும், தடுத்து நிறுத்துவதும், அவை கவனத்தைச் சிதறடிப்பதும் பேசப் படுகின்றன. ஆனால் ஐம்பது வருடம் முன்னர், செய்தித் தொடர்பும், சுதந்திர கால வெகுஜனத் தொடர்பும் எப்படி இருந்ததன என்பதை ஆராயும் எனது கட்டுரை. இக்குறிப்பை எழுதத் தூண்டியது இதில் இருந்த சில மனிதர்களின் கதைகள். இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியிருக்கிறது. https://madraspaper.com/indian-freedom-struggle/

இன்றைய தியானம்

Image
இன்றைய தியானம் -------------------------------- இன்று வழக்கம் போல சைக்கிள் இடது ப்ரேக் தேய்ந்தது. அதற்கு இதுவரை பத்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் ஆகியிருக்கிறது. ஆகவே உடலில் எப்போதும் ஒட்டாது. போய்ச் சரி செய்தால் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும். அப்புறம் இது போல் ஒவ்வாமை. சரி செய்ய மேலும் கீழும் 12 கிலோமீட்டர் போக வேண்டும். சைக்கிள் வேர்ல்ட் அம்மாள் , எப்பவும் போல 'புல் சர்வீசா ' என்று கேட்பார். இப்போதெல்லாம் சைக்கிள் சர்வீஸ் ஆயிரம் என்கிறார்கள். சர்வீஸ் வேண்டாம், ப்ரேக் மட்டும் வேலை என்பேன். சிறு வேலை என்றால் மெக்கானிக் பிசியாக இருப்பார். சிறு பிள்ளைகளின் அப்பாக்களிடம் போட்டியிட முடியாது. வீடு காலி பண்ணி மனைவி சகிதம் , சைக்கிளை காரில் போட்டு வந்திருப்பார்கள். அப்பா பேபி சைக்கிளில் மணி கட்டுவது, துணைச் சக்கரம் மாட்டுவது, வாட்டர் பாட்டில் சொருகுவது போல் இப்படி இடம் திருவிழா போல் இருக்கும். நமக்கு ஹிந்தி வராது. பேசாமல் வேடிக்கை பார்த்து நிற்க வேண்டியது தான். 'பையா, தோடா காம் ஹை..கித்னி பார் போல்த்திஹு' என்று சொல்லியோ, அம்மாளிடம் எஸ்கலேட் செய்து கவனத்தைப் பெற வேண்டும். அப்ப...

நானும் (குறுங்கதை)

Image
நானும் (குறுங்கதை) -------------------- அந்த நகரத்தில் அண்ணனும் தம்பியும் சில மாத இடைவெளிக்குப் பின் அன்று சந்தித்தார்கள். தம்பி வீட்டின் கூடத்தில் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. பிள்ளைகள் ஆளுக்கொரு நாற்காலியில் இருந்தனர். காப்பி குடித்ததும் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை. தம்பி வெளியில் எங்கோ பார்த்தார். தினம் வரும் தையல் குருவி அன்றும் சுவரில் ஆசுவாசமாய் இருந்தது. சுவரில் இருந்து குதித்துத் தாவி நடந்து நிதானமாய் பூமியைத் தேட ஆரம்பித்தது. 'பொண்ணு நல்லா படிக்கிறாளா?, என்ன ஸ்ட்ரீம் ...ஏ ஐ , மேத்ஸ் இல்ல ?' அண்ணன் கேட்டார். 'ஏதோ படிக்கறா ' தம்பிக்கு அதற்கு மேல் தெரியாது. தம்பியின் மகள் ஏதோ பேச வந்தாள். பேசவில்லை. 'இவளுக்கும் ஏ ஐ அப்பவே இருந்துச்சு..நீ ஒன்பதாவதிலேயே ஏ ஐ , படிச்ச இல்ல" வேலைக்குப் போகும் அண்ணன் மகள் தலையை ஆட்டினாள். தலை குனிந்திருந்த தம்பி பையனைப் பார்த்துக் கேட்டார். 'இவன் ஒழுங்கா படிக்கிறானா..இன்னும் விளையாடிட்டுத்தான் திரியிறானா? அடுத்த வருஷத்தில இருந்து விளையாட்ட மூட்டை கட்டி வைச்சுரனும்...என் பிள்ளைகளுக்கு ஸ்போர்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியாது....

ஆதித் தாய் முதல் ஆடி அம்மன் வரை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
நம் மரபில் தாய் வழிபாடு எங்கு ஆரம்பித்தது. இன்று நாம் காணும் இதன் எச்சங்கள் என்ன என்பதை ஆராயும் என் கட்டுரை - இந்த மெட்ராஸ் பேப்பர் இதழில் https://madraspaper.com/matriarchy-tamils/ 

மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள்

Image
மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள் ----------------------------------------------- வருடத்திற்குப் பல முறை மதுரை செல்கிறேன். பல வருடங்கள் இப்படிச் செல்கிறேன். இந்த முறைதான் தெரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறேன். நான் சொல்வது பிரதான சாலையில் அல்ல. வீட்டுப் பகுதிகளில், மனிதர்கள் இரவில் நடமாடும் இடங்களில் விளக்கு எரிகிறது. முன்னெல்லாம் நம் வீட்டு குழல் விளக்கை தெருவுக்காகப் போட்டு வைக்க வேண்டும். எனக்கு எல்லா தெரு விளக்குகளும் ஒரே நேரத்தில் எரிவது பேரதிசயம். மாணிக்கம் தாகூர் இப்பகுதியில் வசிக்கிறார், அவரே எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் .அதுவாக இருக்குமோ என்று நினைத்தேன். இதன் முன்னாலும் அவர் தான் என்ற மறு சிந்தனை வந்தது. இரண்டாவது, சாலையின் மேல் ஒரு ஸ்கூல், குறுக்குச் சாலையில் இன்னொன்று என்று வீட்டின் அரைக் கிலோமீட்டரில் இரண்டு கல்விக் கூடங்கள். ஒரு கிலோமீட்டரில் இன்னும் சில பாட சாலைகள் உள்ளன. இதன் நடுவில் தான் முள்ளென டாஸ்மாக் இருந்தது. சிலர் ஒதுங்கிப் போவார்கள். சிலர் சாஸ்வதம் போல் ஏற்றுக் கொண்டு நடமாடுவார்கள். இந்த டாஸ்மாக் அரசின் விதிகளின் படி மூடப் பட்டிருக்கிறது. குடியை ஒழித்தால் உ...