18/30 புதிய காகக் கதை ---------------------------- அந்த அண்டங்காக்கை மாடிச் சுவரில் அமர்ந்திருந்தது. தலையை ஆட்டி மூக்கில் இருந்த அப்புழுவை சுவற்றில் தட்டியது. மண் உதிர்ந்ததும் விழுங்கியது. புல்வெளியில் சறுக்கி இறங்கி கூட்டத்தில் சேர்ந்தது. கோடை வெயிலேறும் முன் உணவு தேட வேண்டும். வெயிலில் பறப்பது ஆகாது. தத்தத்தத்...தத் கோரைப்புல்லில் ஒன்றும் அகப்படவில்லை. குப்பைத் தொட்டியில் விழுந்திருந்த உறிகுழாயை தூக்கி நிறுத்தியது. சிறிதாய்ப் பறந்து தரையில் காய்ந்த குச்சியை அலகால் புரட்டிப் பார்த்தது. அருகில் இன்னொரு இலை உதிர்ந்த காம்பின் பக்கக் கிளைகளை வெட்டியது. கண் நேர்த்தி சரி என்றதும் தூக்கிப் பறந்தது. குழாயில் நளினமாக விட்டு சிக்கியிருந்த பழத்துண்டை வெளியில் எடுத்தது. தத்தத் ...ஓர் புளியங்கொட்டை. தாவிச் சென்று ரோட்டில் போட்டது. கார்கள் ஏறி உடையக் காத்திருந்தது. வரவில்லை. வேகத்தடைத் திருகின் இடுக்கில் வைத்துக் கொத்திப் பிளந்தது. ஒருவர் சாளர நாற்காலியில் அமர்ந்தார். சிந்தனை என்று பூச்சிகளாய் தாளில் எழுதிக் கீழே போட்டார். காக்க...
ஓரிரு எண்ணங்கள் - Muthu Vishwanathan