சில கவிதைகள்
மரணத்தை நடித்தல் -------------------------- அற்ப வயதில் ஒருவரைப் பறிகொடுத்த அந்த வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் முடிவின்மையின் சுவரில் மோதி செய்ய ஒன்றும் இல்லாமல் நடித்துப் பார்க்கிறார்கள் கணவர்கள் கணவராய் மனைவிகள் மனைவியாய் அன்னைகள் அன்னையாய் தந்தையர் தந்தையாய் அந்த உடலாய் அதன் நோயாய் ஒத்திகை முடிந்து இழப்பின் அருகில் இருக்கும் அவர் கை பிடித்து ஓரிரு சொல்லில் மற்றோர் முறை சொல்லிற்கு அப்பால் மற்றுமோர் முறை அவ்வுடல் உச்சிக் கிளையின் பறவை ----------------------------- அந்தப் பறவை உச்சிக் கிளையில் அமர்ந்திருந்தது கீழிருந்து நீரில் மிதக்கும் பறவைகள் உற்றோர் உறவோர் வங்கி கடன் கூடல் பிரிவு பயம் துணிவு தயவு தாட்சண்யம் உண்டு இல்லை என இன்னும் பல நாளும் பொழுதும் கூறிய படி இருந்தன கிளையில் இருந்த பறவை பெரும்பாலும் மொழியில்லாமல் தலையை மட்டும் ஆட்டிக் கேட்டது பின் ஒரு கணம் வி...