Posts

Showing posts with the label ஆப்பிள்

Translate

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி

Image
ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி  -------------------------------------------------- பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும். எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு. புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது. இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழ...

ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில்

Image
ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில்  ------------------------------------------- என்றோ ஆதி மனிதனின் காலில் ஒரு கல் இடறி வந்த ரத்தமே அந்தக் கல்லின் மேல் நெற்றிப் பொட்டாய் மாறியது. ஆதிமனிதன் ஒருவன் தன்னைக்  கீழே வீழ்த்திய அந்தக் கல்லே, மனிதன் வியந்து என்ன என்று கேட்ட இடமே வழிபாட்டின் முதல் படி. அன்று முதல் இன்று வரை மனிதனின் கால் இடர்களும் , கேள்விகளும் முடியவே இல்லை. ஆனால் ஒன்றுண்டு, மனிதன் வியக்கும் எல்லாமும் கடைசியில் வழிபாட்டில் தான் போய் முடிகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அருகிலிருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். சாயங்காலம் அந்திப்பொழுதில் மலைமேல் ஏறி ஊரைப் பார்க்கும் போது , ஓசுர் LED டாஷ்போர்டைப் போல் தோன்றியது. விளக்குகள் மின்னியும் அணைந்தும் , சில இடங்களில் மின்மினி போல் பறந்தவாறும்,சில இடங்களில் நின்று அமர்ந்து யோகியைப் போல் நின்று எரிந்தும் , சில இடங்களில் காரிருளும் அந்த ஒளியால் துலங்கின. உள்ளே பிராகாரத்தில் இருந்த மூன்று சிலைகளை ஊன்றிக் கவனித்தேன். ஒன்று யமனின் சிலை. யமன் இறப்பின் உருவம். வலக்கையில் பாசக்கயிறும், இடக்கையில் காகமும், காலத்தின் கருமையான எரும...