நேரத்தைக் கையாள நடைமுறை வழிகள் - ஜெயமோகன்
நேரத்தைக் கையாள வழிகள் - ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் காணொளி உரை கீழே இறுதியில் இருக்கிறது. இரண்டு முறை (80%-20%) பார்த்து எழுதியது. செயல் என்பது காலத்துடன் இணைந்தது. காலத்தைக் கையாளுவதற்குப் பெயர் தான் செயல் எனப்படுவது. காலத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவனால் செயலாற்ற முடியாது, செயல் என்பது நேரத்தைச் செலவழிப்பது மட்டுமே. காலத்தை எப்படி நடைமுறையில் கையாளுவது?. சில பொன்விதிகள். 1. இது காலத்தை வீணாக்குகிறதா? தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்றவை நேரம் உறிஞ்சவே வடிவமைக்கப் பட்டுள்ளன. நம் நேரத்தை பிக் பாக்கெட் செய்கின்றன. நாளின் நேரத்தை இதில் விரயம் செய்கிறோமா என்ற கேள்வி பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும். 2. செயலில் குவிதல். ஒதுக்கிய நேரத்தில் ஒதுக்கிய செயலை மட்டுமே செய்ய வேண்டும். முழுமனதுடன், முழு கவனத்துடன் அந்த ஒரே செயலை மட்டும் ஆற்ற வேண்டும். இரண்டு வேலை செய்யலாகாது. இந்த நேரத்தில் வேறு எதுவும் நடுவில் குறுக்கிடக் கூடாது. 3. கோல்டன் டைம் : காலை நேரம் ஆற்றல் உள்ளது. அதை முக்கியமான செயல்கள் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். கற்பனை உச்சத்தில் இருக்கும் நேரம். மாலை நேரங்களை ...