Posts

Showing posts from May, 2026

Translate

ஒரு யாசித்தல்

Image
ஒரு யாசித்தல் ------------------  என்னுடைய நடைபாதையில் எனக்கு அது முக்கியமான இடம். நான் இருக்கும் இந்தச் சாலை பத்து வருடப் பழக்கம். சாலையே இல்லாமல் இருந்த காலம் தொட்டு, இப்போது இரண்டு வழிச் சாலை வரை. வழியில் ஒரே ஒரு டீக்கடை. ஐயங்கார் பேக்கரி. நானே பார்த்து எத்தனையோ கை மாறியிருக்கிறது. இப்போது எதிரில் ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது. கிழக்கே இருக்கும் கடையைப் பார்த்து முப்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. கடைக்குப் பின்னால் ஓடும் சாலையில் இறங்கினால் கோபசந்திரா கிராமம். சுரைக்காய் , திராட்சைத் தோட்டங்கள் பார்க்கலாம். அதுவே எனது வழிப்பாதை. நான் இங்கே போகும் மாலை வேளைகளில் , எதிர் நிற்கும் புளிய மரத்தின் பின்னால் முழு வானமும் தெரியும். இதைத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தொடுவானம் வரை விண்முட்டும் கட்டிடங்கள் எதுவும் சூரியனுக்குக் குறுக்கே வராது. எல்லாம் தாண்டி பொன்னொளி புளியமரத்தில் விழும். இலைகள் நுனிகளில் தளிர் ஒளி கொள்ளும். நாளில் ஓரிரு முறையேனும் இங்கு வந்து போவது என் வாடிக்கை. தலை பின்னிக்  கொண்டை முடிந்த பையன் பல வருடங்களாக ...

நேரத்தைக் கையாள நடைமுறை வழிகள் - ஜெயமோகன்

நேரத்தைக் கையாள வழிகள் - ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் காணொளி உரை கீழே இறுதியில் இருக்கிறது. இரண்டு முறை (80%-20%)  பார்த்து எழுதியது. செயல் என்பது காலத்துடன் இணைந்தது. காலத்தைக் கையாளுவதற்குப் பெயர் தான் செயல் எனப்படுவது. காலத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவனால் செயலாற்ற முடியாது, செயல் என்பது நேரத்தைச் செலவழிப்பது மட்டுமே.  காலத்தை எப்படி நடைமுறையில் கையாளுவது?.  சில பொன்விதிகள். 1. இது காலத்தை வீணாக்குகிறதா? தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்றவை நேரம் உறிஞ்சவே வடிவமைக்கப் பட்டுள்ளன. நம் நேரத்தை பிக் பாக்கெட் செய்கின்றன. நாளின் நேரத்தை இதில் விரயம் செய்கிறோமா என்ற கேள்வி பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும். 2. செயலில் குவிதல். ஒதுக்கிய நேரத்தில் ஒதுக்கிய செயலை மட்டுமே செய்ய வேண்டும். முழுமனதுடன், முழு கவனத்துடன் அந்த ஒரே செயலை மட்டும் ஆற்ற வேண்டும். இரண்டு வேலை செய்யலாகாது. இந்த நேரத்தில் வேறு எதுவும் நடுவில் குறுக்கிடக் கூடாது.  3. கோல்டன் டைம் :  காலை நேரம் ஆற்றல் உள்ளது. அதை முக்கியமான செயல்கள் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். கற்பனை உச்சத்தில் இருக்கும் நேரம். மாலை நேரங்களை ...

உள்ளிருக்கும் காடு

Image
உள்ளிருக்கும் காடு ------------------------ ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க்  கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன்.  எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன்.  ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார்.  நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை ...

பாதாளக் காற்று ...

Image
பாதாளக் காற்று .... ------------------------ கோடை போய் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. ஊரின் ஒதுக்குப் புறம், காற்றைத் தடுக்க யாரும் இல்லை. மரங்களையும், செடிகளையும் சன்னமாய் ஆட்டிவிட்டுச் செல்கிறது. மீண்டும் திரும்பி வந்து மற்றுமொருமுறை.  யூக்கலிப்டஸ் மரம் யானையென தலையையும் காதையும் சரித்து ஆட்டியபடி இருக்கிறது. அதன் பக்கக் கிளையில் புல்புல் அமர்ந்து அலகை உரசித் தீட்டுகிறது. அதன் சிறகுகள் மெலிதாய் காற்றில் அசைகின்றன.  வெள்ளை வண்ணத்துப் பூச்சி படபடத்துப் பறந்து கடுக்கன் பூவில் அமர்கிறது. மலர் நுகர்கையில் அதன் சிறகுகள் அதிர்கின்றன. ரெட்டை வால் குருவி சுற்றுச் சுவரில் உட்காருகிறது. வாலில் தெரியும் இரண்டு கரு மீன்கள் காற்றில் அளைகின்றன.  புல்லின் தோடும், மடலும் லேசாக ஆடுகின்றன. ஒரு சிற்றெறும்பு காற்றில் திசை மாறிப் பின் வழி செல்கிறது.  பூக்களை உதிர்த்து இலை மட்டும் கொண்டுள்ள வசந்த மரத்தின் ஒரு இலை நிலத்தில் உதிர்கிறது. காற்று அதை இன்னொரு சருகுடன் தள்ளிச் சேர்க்கிறது. பின்னர் அவை கூட்டமாய் பிளாஸ்டிக் பை கசக்கும் ஒலியுடன் , பேச்சும், சிரிப்புமாய் கூடிப் பிரிகின்றன. தையல் க...

மன உளைச்சலுக்கான காரணங்கள்

கீழ் வருபவை மன உளைச்சல் ஏற்படும் காரணங்கள். இதைச் சொல்பவர் மூளைச் செயல்பாட்டை வாழ்க்கை முழுதும் ஆய்வு செய்பவர். Behvae என்று மூளையைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார். பெயர் ராபர்ட் சபோல்ஸ்கி, ஸ்டான்போர்ட் விரிவுரையாளர். 1. நடந்த உரையாடல்களை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பது. முதல் முறை நடந்த சம்பவம் மனதில் எவ்வளவு உளைச்சலை ஏற்படுத்தியதோ, அதுவே மீண்டும் மீண்டும் அதை மீட்டிப் பார்க்கையில் நிகழ்கிறது. நிகழ்ந்த அவமானங்கள், சரியாக நடக்காத செயல்கள், சிறிய, பெரிய துரோகங்கள் போன்றவை.  2. நடக்கப்போகும் சம்பவங்களை எண்ணிக் கவலைப் படுவது. பள்ளியில் சேர்ப்பது, வயதாவது, வேலை கிடைப்பது போன்ற பின்னால் வரும் சம்பவங்களுக்காக கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை. ஏதாவது உடனே, சீராக செய்ய இருந்ததால் செய்து கவலையைத் தள்ளி வைக்க வேண்டும். 3. தொடர்ந்து செய்திகள் பார்ப்பது .  4. துன்பமான, வன்முறையான நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்ப்பது. கற்பனைக்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் நரம்பு மண்டலத்திற்குத் தெரியாது. அடுத்தவர்க்கு நடப்பதைப் பார்ப்பதும், தனக்கு நடப்பதும் மனதளவில் ஒன்றுதான்.  5. நம்...

'மறக்க முடியாத மனிதர்கள்' - வண்ண நிலவன் - சென்ற தலைமுறை ஆடம்பரம்

Image
சில நாட்களாக வண்ணநிலவன் எழுதிய 'மறக்க முடியாத மனிதர்கள்' வாசித்துக் கொண்டிருந்தேன். மாம்பழந்தானே என்றாலும் எல்லோருக்கும் அதை லாவகமாய் நறுக்க வருவதில்லை. அப்பா நன்றாக ரசித்து மாம்பழம் வெட்டுவார். என் மாமனார் அதன் தோலை ஒரு பச்சைத் தடமில்லலாமல் சீவி எடுப்பார். அவருக்கு அது குழந்தை மென்மை. குழந்தைக்கு தலை மழிப்பது. அது எல்லா நாவிதர்களுக்கும் கை வருவதில்லை. என் பையன் முதல் தலைமழிப்பு, முடியெல்லாம்  ரத்தத்தில் ஒட்டி, கண்ணிலும், மூக்கிலும் நீர் கொட்டி போராய் முடிந்தது நினைவில் வருகிறது. ஒவ்வொரு தோலுக்கும் தனிக் குணம் இருக்கிறது. மேலும் எல்லாக் கத்திகளும் எல்லா வேலைகளையும் செய்வதற்கில்லை. கத்தியின் கூறும், தோலின் பதமும் அறிந்தவர் கை தேர்ந்த திருத்துநர் ஆகிறார். அப்படி மாம்பழம் வெட்டுவது போன்ற எழுத்து வண்ண நிலவனுடையது. அவரால் மறக்க முடியாத பத்து எழுத்தாளரகளைப் பற்றிய தொகுப்பு. படித்து முடித்தால் அவருடைய வாழ்வின் கோட்டுச் சித்திரம் மிக அழகாக வெளிப்படுகிறது. தன்னைச் சிறிதும் நடுவில் நிறுத்தாமல் எழுதிய தன் வரலாறு போல் தோன்றியது. யார் நெருக்கம், யாரிடம் வியப்பு, யார் சக எழுத்தாளர்கள் என்று ...

தத்துவமாதல்

Image
தத்துவமாதல் -------------------------------  அப்பா, நாளைக்கு காலேல நாலே முக்காலுக்கு அங்க இருக்கனும். அவன் அம்மா தூங்கிவிட்டிருந்தாள். மாடிப்படியில் இருந்து இறங்கியபடி சொன்னான். படித்துக் கொண்டிருந்த அக்காவின் பேனா நோட்டில் ப்ரேக் போட்டு நின்றது. 'எத்தனை தடவை, சொன்னதேயே சொல்லுவடா ..டயரிங் ஸ்ரீ'. சொல்லியபின்  பேனா திரும்பப் பாதையில் பயணித்தது.  அவனை ஊன்றிப்  பார்த்தேன்.  அப்போது இரவு பதினோரு மணி. காலையில் செல்வதற்கு அரை மணி. கிளம்ப அரை மணி. மொத்தத்தில் தூங்கி எழுவதற்கு மூணே முக்காலைக் குறி வைக்க வேண்டும்.  அவனுக்கு  இப்போதைய ஆசை கால்பந்து வீரனாக வேண்டும் என்பது . கனவு காணும் வயது. அவனே தேடிப் பிடித்த  பைச்சுங் பூட்டியாவின்  பயிற்சி நிறுவனத்தில் அவனைச் சோதிப்பதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது ஆடும்  இடத்தில் அவனுக்குத் திருப்தி இல்லை.  நம்ம விட திறமையானவங்களோட விளையாடனும்பா..நம்ம கத்துக்கமுடியும்...கோச் சொன்னாரு  குடியிருப்பில் சுற்றி வரும் நடைபாதையில் தனியே இரவில் பயிற்சி செய்வான். அவனே உதைத்து, திரும்பி  எடுத்து வந...

அறியாமை (சிறுகதை)

Image
அறியாமை   (சிறுகதை) ------------------------------ சிறிய இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட கம்பி வலை. கீழே ஆழமான குழி . வலையின் நடுவில் சிவந்த பாறை  என அசைவற்ற ஆட்டின் இறைச்சி . ஒரு  புலி முன்னங்காலைத் சற்று தூக்கி, தலை தாழ்த்தி அதைப் பார்க்க நின்றது.  கண்கள் மாமிசத்தை ஊழ்கமென நோக்கின.மாயவலையென அறிந்து பின்னகரும் என நினைத்த பொழுதில், இறைச்சியை நோக்கி முழு உடலும் பாய்ந்தது. காதடைக்கும் சப்தத்துடன் கம்பி அறுந்து, வேங்கை படுகுழியில் விழுந்தது. படுக்கையில் ராமச்சந்திரன் அப்பா என அலறினான். குரல் கேட்டு மனைவி ராமச்சந்திரனை பலமுறை தட்டியபடி எழுப்பினாள்.  இடுங்கிய பற்களுடன் கண் விழித்தான். கைகள் அழுத்தமாய் கட்டிலின் விளிம்பைப் பற்றியிருந்தன. அப்பா இறந்து ஒரு மாதம் இன்னும் முடியவில்லை.  ராமசந்திரனுக்கு பொறுப்பு என்ற சொல்லின் அர்த்தம் விளங்க ஆரம்பித்திருந்தது. மாதத் தவணை முதல், வட்டிக் கடன் வரை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டே இருப்பார். இனிமேல் இல்லை. படிக்கும் பிள்ளைகள் வளர்ந்து விடும். பொறுப்பு அதிகமாகப் போவதை எண்ணினான். தன்னில் பாதி விட்டுப் போயிருப்பதை உணர்ந்தான்....