நானும் (குறுங்கதை)
நானும் (குறுங்கதை) -------------------- அந்த நகரத்தில் அண்ணனும் தம்பியும் சில மாத இடைவெளிக்குப் பின் அன்று சந்தித்தார்கள். தம்பி வீட்டின் கூடத்தில் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. பிள்ளைகள் ஆளுக்கொரு நாற்காலியில் இருந்தனர். காப்பி குடித்ததும் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை. தம்பி வெளியில் எங்கோ பார்த்தார். தினம் வரும் தையல் குருவி அன்றும் சுவரில் ஆசுவாசமாய் இருந்தது. சுவரில் இருந்து குதித்துத் தாவி நடந்து நிதானமாய் பூமியைத் தேட ஆரம்பித்தது. 'பொண்ணு நல்லா படிக்கிறாளா?, என்ன ஸ்ட்ரீம் ...ஏ ஐ , மேத்ஸ் இல்ல ?' அண்ணன் கேட்டார். 'ஏதோ படிக்கறா ' தம்பிக்கு அதற்கு மேல் தெரியாது. தம்பியின் மகள் ஏதோ பேச வந்தாள். பேசவில்லை. 'இவளுக்கும் ஏ ஐ அப்பவே இருந்துச்சு..நீ ஒன்பதாவதிலேயே ஏ ஐ , படிச்ச இல்ல" வேலைக்குப் போகும் அண்ணன் மகள் தலையை ஆட்டினாள். தலை குனிந்திருந்த தம்பி பையனைப் பார்த்துக் கேட்டார். 'இவன் ஒழுங்கா படிக்கிறானா..இன்னும் விளையாடிட்டுத்தான் திரியிறானா? அடுத்த வருஷத்தில இருந்து விளையாட்ட மூட்டை கட்டி வைச்சுரனும்...என் பிள்ளைகளுக்கு ஸ்போர்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியாது....