Posts

Showing posts with the label உடல் நலம்

Translate

மன உளைச்சலுக்கான காரணங்கள்

கீழ் வருபவை மன உளைச்சல் ஏற்படும் காரணங்கள். இதைச் சொல்பவர் மூளைச் செயல்பாட்டை வாழ்க்கை முழுதும் ஆய்வு செய்பவர். Behvae என்று மூளையைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார். பெயர் ராபர்ட் சபோல்ஸ்கி, ஸ்டான்போர்ட் விரிவுரையாளர். 1. நடந்த உரையாடல்களை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பது. முதல் முறை நடந்த சம்பவம் மனதில் எவ்வளவு உளைச்சலை ஏற்படுத்தியதோ, அதுவே மீண்டும் மீண்டும் அதை மீட்டிப் பார்க்கையில் நிகழ்கிறது. நிகழ்ந்த அவமானங்கள், சரியாக நடக்காத செயல்கள், சிறிய, பெரிய துரோகங்கள் போன்றவை.  2. நடக்கப்போகும் சம்பவங்களை எண்ணிக் கவலைப் படுவது. பள்ளியில் சேர்ப்பது, வயதாவது, வேலை கிடைப்பது போன்ற பின்னால் வரும் சம்பவங்களுக்காக கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை. ஏதாவது உடனே, சீராக செய்ய இருந்ததால் செய்து கவலையைத் தள்ளி வைக்க வேண்டும். 3. தொடர்ந்து செய்திகள் பார்ப்பது .  4. துன்பமான, வன்முறையான நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்ப்பது. கற்பனைக்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் நரம்பு மண்டலத்திற்குத் தெரியாது. அடுத்தவர்க்கு நடப்பதைப் பார்ப்பதும், தனக்கு நடப்பதும் மனதளவில் ஒன்றுதான்.  5. நம்...

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ?

Image
மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ? நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. காலால் நடந்து என்ன ஆகி விடப் போகிறது? தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் ஏழாயிரம் என்கிறார்கள். இது அவசியமா? எதாவது உடல் வேலை செய்வது முக்கியமா? ஆரோக்கியத்திற்கும் , கையையும் காலையையும் அசைப்பது சம்பந்தம் உண்டா ? அதிலும் தினமும் நடப்பது அவசியமா? அண்மையில் ஹுபெர்மன் வலையொலி மூலம் மனிதனின் நிணநீர் மண்டலம் குறித்து அறிய நேர்ந்தது. இது எனக்கு கண்திறப்பாய் அமைந்தது. எனவே அதைப்பற்றிய சிறு குறிப்பு.  நான் என்னுடைய பாட்டியின் ஊருக்கு முழுப்பரிட்சை விடுமுறையில் செல்லும் போது, காலை ஆறரை மணிக்கு வெளியே தெரு பார்த்து போடப் பட்டிருக்கும் திண்ணையில் முதுகு சாய்த்து உட்கார்ந்து பேப்பர் படித்தபடி , தெருவை வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஊர் கண் விழிக்கும் அந்த வேளையில், மணிகள் லேசாக குலுங்க, கன்றுகள் முன்னாலும் பின்னாலும் ஓட , அவ்வப்போது கம்பு மாட்டின் முதுகில் உறையும் ஓசையுடன் , எருமையும் , பசுவும், காளைகளும் தெருவில் சாணியும், மூத்திரமுமாய் ஒரு பக்கம் ஊரணி பார்த்துச்  செல்லும். மறு...

ஒரு குறைநிரப்பி (supplement)

 Creatine Monohydrate ---------------------------- ஒருவாரமாக creatine என்ற ஒரு பௌடரை நீரில் பத்து கிராம் போட்டுக் குடித்து வருகிறேன். ஒரு சில வாரமாய் புத்தகம் படிக்கையில் முன்னை விட வெளிச்சம் தேவை இருக்கிறது. வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்து வலது புறம் இருந்து வரும் அறை வாசல் வெளிச்சத்தில் முன்பெல்லாம் படிக்க முடியும். முன்னைவிட சற்று அதிகமாக கான்ட்ராஸ்ட் வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் நான் ஜீரோ கான்ட்ராஸ்ட் வைத்து வேலை பார்ப்பது வழக்கம். பக்கத்தில் வந்து நின்றாலும் திரையைப் படிக்க முடியாது. இன்றைய அடைமழை மேகம் கவ்வியது  போன்று இருக்கும். கண் இமை இரண்டும், எப்போதும் இல்லையென்றாலும் நாள்களில் சிலமுறை , பாரமாய் இருந்தது. மேலே தூக்கி வைத்தால் சிறு வலி. தசைகளை வலுக்கூட்டி உன்னிப்பாக பார்த்தால் வலி. அப்போது எழுத்துக்கள் தண்ணீர் தெளித்தது போல் ஆகி விடுகின்றன. கேரட்டுகள் குறைந்தது காரணம் என்று , அவைகளை அதிகம் சாப்பிட்டுப் பார்த்தேன். தலைகீழ் ஒரு சில நாள் நின்று பார்த்தேன். முன்பு பக்கத்தில் வைத்துப் படிக்க முடிந்த எழுத்துக்கள், இப்போது கண்ணை பின்னால் நிறுத்து என்கின்றன. கண...

இது வேறு ஒரு சக்கரம்

Image
2063 என்று சொல்லிப்பார்த்தால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை. இந்த நம்பரை நாட்கள் என்று எண்ணி  365 -ல் வகுத்து 5.8 வருடங்கள் என்றால் நீளம் தெரிகிறது. 2063-ஐ  ஐந்தால் பெருக்கினால் இன்றிலிருந்து வாழ்நாள் கடைசிக்கு வந்து விடும். இப்போது மீண்டும் சிறிதாகத் தோன்றுகிறது. ஆறேழு  வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஒரு விழாப் பந்தலில், என்னையும் சேர்த்து மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்து, நாலாவது நண்பரின் விழாவில் என்ன செய்வது என்பது என்று தெரியாமல், சாப்பாடு நேரம் எப்ப வரும் என்று எதிர்பார்த்து சேரைத் தேய்த்து, கால் மாற்றி மாற்றி உட்கார்ந்து எல்லாம் செய்து, மேற்கொண்டு செய்வதறியாமல் இருக்கும் போது தான் , அருகிலிருந்த நண்பரின் கையிலிருந்த ஆப்பிள் வாட்சை முதலில் அருகில் கண்டேன்.  (அவர் அப்போது தான் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி பண்ணி கையில் கட்டி இருந்தார். அதையே இன்னும் கட்டியிருக்கிறார்...இங்கு பொருத்தம் இது தான் : அவர் பெயர் மணி , ஆனால் அவர் கை மணி மாறாதது ) .   அது இதயத் துடிப்பைக் காட்டும் என்று சொன்னார். வாங்கி கையில் கட்டிப் பார்த்தேன். அறிவியலின்படி எதையும் நீங்கள் அளக்க ஆரம்ப...

கோடிக்கால் பூதம்

Image
கோடிக்கால் பூதம்  சைக்கிள் மிதித்துச் செல்லும் போது காதில் எதாவது ஓடிக்கொண்டே இருந்தால் தூரம் தெரியாது. ஏதவாது போட்காஸ்ட் அல்லது பாடல்கள். ஒரு சில நாள்களில் வெறும் வேடிக்கை அல்லது அன்றைய யோசனை. பாடல் என்றால் ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல்களுக்குள் இடம் வந்துவிடும். பொதுவாக ஒரு தேடல் போட்டு, வேறு யாரோ ஒருவர் பதிவிட்ட பிளே லிஸ்டை சீரற்ற வரிசையில் கேட்பது என் வழக்கம்கே. எதோ ஒரு பாடல் அல்லது ஒரு வரி நாளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.   அன்று டி.எல். மகாராஜன் பாடிய காதல் யோகி யோகி என்ற பாடல் வந்தது ( https://www.youtube.com/watch?v=mwIS_fZ2mRc ). பரணில் ஏறி ஏதாவது எடுக்கும் போது , வேறு எதாவது தட்டுப்பட்டு நினைவுகளை இன்னும் பின் தள்ளுவது போல. தாளம் (taal ) 1999-ல் வெளிவந்தது. முதலில் ஹிந்தியில் , பின்னர் தமிழ் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு வெளி வந்தது. ரஹ்மானின் இசையில் பாடல்களுக்காவே பிரபலமானது. தமிழ் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்ப்பை பெற்றன. நான் கல்லூரி  படிக்கும் நேரத்தில் ஒன்று இதை விசிடி (திருட்டு) அல்லது ஊபர் கட்டிய ஒலிப்பெட்டிகளிலோ கூடிக் கேட்பார்கள். மேலும் ...

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 2

Image
உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 தாமஸ் கோவன் Four Fold Path To Healing என்னும் நூலில் இதயம் ஏன் ஒரு மோட்டார் பம்ப் இருக்க முடியாது என்பதற்கான வலுவான கேள்விகளை எழுப்புகிறார். இந்த ஊகத்தை முதலில் முன்வைத்தவராக ருடோல்ப் ஸ்டெய்னர் என்பவரைக் குறிப்பிடுகிறார். நம் உடலின் ரத்த ஓட்டம் என்பது ஒரு வட்டப் பாதையில்  ( closed loop ) நடப்பது. இதயத்தின் நீளம்  12 செமீ , அகலம் 6 செமீ, சுமார் 300 கிராம் எடை உள்ளது. ஒட்டுமொத்த உடலை வைத்துப் பார்க்கையில், குறுக்குவெட்டில் இந்த இடம் மிகச்சிறியது. இந்தச் சிறிய இடத்திற்குள்ளிருந்துதான் ரத்தம் மேலேயும் , கீழேயும் கடைசி வரை செல்வதற்குமான அழுத்தத்தைப் பெற வேண்டும். இதயத்தில் இருந்து வெளிவரும் ரத்தம், சிரைகளில் கீழ்நோக்கி பயணிக்கிறது. இங்கு இவை பல கிளைகளாக பிரிந்த வண்ணம் சென்று இறுதியில் ரத்த நாளங்களாய் முடிந்து பிராணவாயுவையும் , உணவின் சத்துக்களையும் திசுக்களுக்கு கடத்துகின்றன. ரத்த நாளங்களின் குறுக்கு வெட்டு பரப்பு இதயத்தை விடப்  பெரிது. ஒரு மூன்று கால்பந்து மைதானமாக நாளங்களை விரிக்கலாம். சத்துக்களைக் கடத்தியபின் உடலின் மேல்ந...

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1

Image
உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத்  தொடங்கியவர்.  தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு  இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்...

அடுத்த மூச்சு -2 - சீ... ஓட்டம்

Image
https://muthuvishwanathan.blogspot.com/2022/12/blog-post_28.html மெது ஓட்டம் பற்றி மேலே இருக்கும் முந்தய பதிவு எழுதியபின் , 2023 ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து முறை வீட்டிற்கும் கர்மேலராம் ரயில்வே பாலத்திற்கும் 10கே ஓடிப்பார்த்தேன். இது முடிவில் ஒரு மாதிரி எதிர் திசையில் முடிந்தது. விவரம் கீழே. இப்போது இன்னொரு ஒரு புதிய துவக்கம். அதன் விவரம் அதற்கும் கீழே. Nike ஆப் கோச்சுகள் காதில் பேசிக்கொண்டே வருவார்கள். நமக்கு முதல் எட்டு எடுத்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே தெரிவதால் , அறியாமலே கால் தயங்கும்.  கோச் காதில் தன் குலமுறைமைகள் எல்லாம் சொல்லி, (ஒலிம்பிக் பதக்கம் உட்பட),  'முதல் அடியே வெல்லும் அடி ; வென்றவர்கள் எல்லாம் முதல் அடி எடுத்து வைத்தவர்களே' என்பார்.  நீங்கள் ஆப்பை ஆன்  செய்து முதல் அடி எடுத்தது உங்கள் எண்ணத்தை காட்டுகிறது என்பார். நம் கால் இன்னும் நகராது. அப்புறம் நமக்குள் ஒரு பெரியவர்   'என்னப்பா இவ்வளவு சொல்றாரே..இன்னுமா விளங்கள' என்பார் . நாமே நினைக்காத ஒரு கணம் கால் நம்மை மீறிச் செல்லும். சரி ஒரு வழியாக கட்டு அவிழ்ந்தது.மெல்லிய சூடு நெற்றியில் படர ஆரம்பிக...

அடுத்த மூச்சு -1

Image
விளையாட்டுப் போக்காக Nike Run Club (NRC ) -app ஐ , என்ன இருக்கிறது பார்ப்போம் என்று தரவிறக்கம் செய்தேன். முழுவதும் அப்பிக் கொண்டது. ஓடும் போது பயிற்சியாளர்கள் காதில் பேசுகிறார்கள். ரொம்ப எளிதாக நம்மை ஸ்ட்ரெட்ச் செய்கிறார்கள். ஒரு சவால் தான் , எனக்கும் நன்றாக தான் இருந்தது. நீங்களும் முயற்சிக்கலாம். தெரியாமல் இன்னும் ஒன்றைச் செய்து விட்டேன். ஒரு 21 கீ மீ ஓட்ட டரில்லை ஆரம்பித்தேன். 14 வாரம்,  இப்போது ஐந்திலேயே கஷ்டம் தெரிகிறது. இந்த வாரம் 12.8 கீ . மீ எதிரில் இருக்கிறது. இது ஒரு தன்னை ஆற்றும் முயற்சியே. முதலில் வலியைப் பற்றி எனக்கு தெரிந்ததை இங்கு  சொல்லியாக வேண்டும். வலி என்னும் பரிசு , Pain : Gift Nobody Wants என்னும் புத்தகத்தை பால் ப்ராண்ட் என்பவர் எழுதியிருக்கிறார். இவர் ஒரு அறுவைசிகிச்சை மருத்துவர். இவர் கதையே தனியாக எழுத வேண்டுவது.  இவர் தன் வாழ்வு முழுதும் வலி பற்றியே ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரது வாழ்வின் முடிவில்  எழுதியதுதான் இந்த புத்தகம். அவர் வாழ்க்கை, ஆளுமை இந்த momoirs வழியாக மிகப் பெரிதாக விரிவதைக் காண முடியும்.  பால் ப்ராண்ட் 1914ல் தமிழ...

Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள்

Image
Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள் சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் 6 மணி நேர தூக்கமும் தேவை இல்லை என்றும் , தாம் மூன்று மணி நேரமே தூங்குவதாகச்  சொல்லக் கேட்டேன்.நானும்  இவ்வாறே நினைத்து கொண்டிருந்தேன் .தூக்கம் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அது நம்மைத் தேடிக் கண்டடையும் . இதை பற்றி பெரிய கவலை இல்லாமல் இருப்பதே நாம் செய்ய வேண்டியது. ஆனால் சரியான தூக்கம் இல்லாத நாட்களில் கண் இமைகள் தூங்கும் வரை வலிப்பதையும் , எழுத்துகள் சற்று தெளிவில்லாமல் இருப்பதையும் உணர்கிறேன். முன்னை விட இப்போது ஆள், ஊர் பெயர்கள் வேண்டும் போது நினைவில் வருவதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் crossword புத்தகக் கடையில் இப்புத்தகம் காண நேர்ந்தது. Mathew Walker நரம்பியல் விஞ்ஞானி , தூக்கத்தைப் பற்றி 20 வருடங்களாக ஆராய்ந்து வருபவர், பேசி வருபவர். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்கிறார்.  இனி புத்தகத்தைப் பற்றி... இந்திய ஆன்மிக அறிதலின் உச்சம் என்று  அத்வைதத்தையே பலரும் சொல்வார்கள். அதன் சாராம்சம் என்பது ஆழ்ந்த தூக்கத்தை (சுஷுப்தி) உயர்ந்த அனுபவமாக்கி , விழித்திருப்பதை(ஜாக்ரத்) பிறழ்வு நிலை எ...