Posts

Showing posts with the label வரலாறு

Translate

உள்ளிருக்கும் காடு

Image
உள்ளிருக்கும் காடு ------------------------ ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க்  கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன்.  எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன்.  ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார்.  நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை ...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

Image
பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1 மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம்.  ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலம...