Posts

Showing posts with the label வரலாறு

Translate

பாரதியார் - ஒரு ஆவணப் படம்

Image
பாரதியார் - ஒரு ஆவணப் படம் -------------------------------------- வீட்டில் தொலைக்காட்சி வந்த புதிதில் , சியோலில் ஒலிம்பிக் நடந்து கொண்டிருந்தது. பையனாய் எனக்குப் பார்க்கவேண்டியதெல்லாம் கிரிக்கெட் மட்டுமே. எனக்கு திரைப்படங்களில் அப்போதும் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் துயரங்களை எதற்கு நாம் பார்ப்பது என்ற எண்ணம். நமக்கு நாமே நிறையப் படுவதற்கு இருக்கையில் எதற்கு வீணாய் என்ற என் புரிதல். பார்த்தாலும் சரியாக சோகம், துயரம் ஆரம்பிக்கையில் எழுந்து போய் விடுவது என் வழக்கம். இன்றும் அதே கொள்கை தான். கிரிக்கெட் தாண்டி நான் விரும்பிப் பார்த்த விஷயம் கிருஷ்ணசுவாமி எடுத்த ஆவணப் படங்கள். எப்போதாவது Nat geo டேவிட் அட்டன்பரோ படங்கள் மதியங்களில் காண்பிப்பார்கள். இதற்கும் கலர் டிவி இருந்தால் நல்லது. பெரும்பாலும் கருப்பு வெள்ளையே இருக்கும். ஆவணப் படங்களில் வரும் பேசுபவரின் குரல் இன்றும் வசீகரிக்கிறது. உதாரணமாக கிருஷ்ணஸ்வாமியின் ரமணர் பற்றிய ஆவணப் படம் திருவண்ணாமலையை தூரத்தில் இருந்து காட்டுவதில் துவங்குகிறது. ஊரின் வீடுகள் மலையின் கீழ் சிறு கற்கள் என மண்டிக் கிடக்கின்றன. நகரம் செங்கல் குமியலாய் தெரிக...

உள்ளிருக்கும் காடு

Image
உள்ளிருக்கும் காடு ------------------------ ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க்  கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன்.  எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன்.  ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார்.  நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை ...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

Image
பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1 மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம்.  ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலம...