Posts

Showing posts with the label உணவு

Translate

ஷீரான்னம்

Image
ஷீரான்னம் ------------ இப்போது மார்கழி மாதம் நடுவில் நிற்கிறது. பெங்களூரின் நிலைமையில் டிவி வழியாகத்தான் மார்கழி தெரியவர வேண்டும். டிவி இல்லாமல் பல வருடங்கள் தாண்டி இப்போது சில மாதங்களாய் டிவி வீட்டில் புகுந்திருக்கிறது. நடு வீட்டில் அது சிலுவையில் தூக்கி அறைந்தது போல் பரிதாபமாக நிற்கும்போது எப்போதாவது போட்டுப் பார்த்தே ஆக வேண்டியிருக்கிறது. மதுரையில் இருந்தால் மார்கழி தெரிவது வேறு விதம். காதில் யானைக் காதை குளிருக்கு மாட்டிப் பலர் நடமாடுவார்கள். அதிகாலை வீரமணியின் குரல் குழல் ரேடியோவில் கேட்கிறது. அய்யப்ப பக்தர்கள் சிறு கோவில்களை குத்தகைக்கு எடுத்து வேட்டி துண்டு காயவைத்து ,குளித்து சாப்பிட்டு கோயிலில் இருந்து கொண்டு வீட்டிற்கும் அவ்வப்போது போய் வருகிறார்கள்.  திருப்பரங்குன்ற முருகனும், அன்னை மீனாட்சியும் அய்யப்ப பக்தர்களுக்கும் , முருக பக்தர்களுக்கும் முழு நேர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். உள்ளூர்க்காரர்கள்இந்த இடைவெளி அறிந்து போகிறார்கள்.  ராஜகுலராமனின் மார்கழி இன்னும் வேறு விதம். மார்கழி முதல் தேதி ஆரம்பித்து பொங்கல் முடியும் வரை காலை மாலை குழல் ரேடியோ ஒலிக்கும். ச...

அறுசுவை அரசர்

Image
அறுசுவை அரசர்  --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...