வாதம் , சைத்தியம் , பூண்டு , பூசணி
வாதம் சைத்தியம் , பூண்டு , பூசணி ------------------------------------------- சனிக்கிழமை இந்தப் பகுதியில் சந்தை. மடிவாலா சந்தையைப் போல் பெரிதில்லை இல்லையென்றாலும் , தனியாக இதுவும் பெரிதுதான். மடிவாலா சந்தை அவ்வளவாக பொங்கி வழிவதில்லை. உள்ளேயே சுருண்டிருக்கும். நடந்து போய் வாங்கி வர வேண்டும். ஒரு கிலோமீட்டர் நீளத்தில் இரு புறமும் கடைகள். சனிக்கிழமை சந்தாபுரா சந்தை ஓசூர் சாலையை ஸ்தம்பிக்க வைத்து விடும். சரியாக மேம்பாலத்தின் கீழ் சந்தை இருக்கிறது.எட்டாய்ப் பிரிந்த சாலை. அதன் முனையில் சந்தை. இதுதான் சந்தடி என்பது. திசைகள் என்பது இல்லை. திசைகள் ஒன்றான பந்து போன்ற இடம்.இல்லை எட்டுத் திக்கும் இடிக்கும் இடம். இதற்குள் தான் சரக்கு வண்டிகள், காய்கறி வாங்கும் கார்கள், பைக்குகள் போக வேண்டும். முக்கியமாக நிறுத்த வேண்டும். நாலு கம்பும், படுதாவும், தார்ப்பையும் தான் கடை என்பது. இல்லை அதுவுமே இல்லாமல் பூமியில் மட்டும் நிற்பது.காலை மனிதக் குரல்களாலும் , வண்டியின் உறுமும் ஒலிகளாலும், ஹாரன் சத்தத்தாலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இல்லை சூடு பபிடிக்கவில்லை. மணி எட்டு மட்டுமே. சிறு கல் குவியல் போன்று உரு...