Posts

Showing posts with the label அனுபவக் குறிப்புகள்

Translate

வாதம் , சைத்தியம் , பூண்டு , பூசணி

Image
வாதம் சைத்தியம் , பூண்டு , பூசணி ------------------------------------------- சனிக்கிழமை இந்தப் பகுதியில் சந்தை. மடிவாலா சந்தையைப் போல் பெரிதில்லை இல்லையென்றாலும் , தனியாக இதுவும் பெரிதுதான். மடிவாலா சந்தை அவ்வளவாக பொங்கி வழிவதில்லை. உள்ளேயே சுருண்டிருக்கும். நடந்து போய் வாங்கி வர வேண்டும். ஒரு கிலோமீட்டர் நீளத்தில் இரு புறமும் கடைகள். சனிக்கிழமை சந்தாபுரா சந்தை ஓசூர் சாலையை ஸ்தம்பிக்க வைத்து விடும். சரியாக மேம்பாலத்தின் கீழ் சந்தை இருக்கிறது.எட்டாய்ப் பிரிந்த சாலை. அதன் முனையில் சந்தை. இதுதான் சந்தடி என்பது. திசைகள் என்பது இல்லை. திசைகள் ஒன்றான பந்து போன்ற இடம்.இல்லை எட்டுத் திக்கும் இடிக்கும் இடம். இதற்குள் தான் சரக்கு வண்டிகள், காய்கறி வாங்கும் கார்கள், பைக்குகள் போக வேண்டும். முக்கியமாக நிறுத்த வேண்டும். நாலு கம்பும், படுதாவும், தார்ப்பையும் தான் கடை என்பது. இல்லை அதுவுமே இல்லாமல் பூமியில் மட்டும் நிற்பது.காலை மனிதக் குரல்களாலும் , வண்டியின் உறுமும் ஒலிகளாலும், ஹாரன் சத்தத்தாலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இல்லை சூடு பபிடிக்கவில்லை. மணி எட்டு மட்டுமே. சிறு கல் குவியல் போன்று உரு...

மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை

Image
மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை ---------------------------------------------------- பருவமழை துவங்கிவிட்டது. மாலை ஐந்து மணியில் இருந்து மேகம் நீர் கட்டிக் காத்துக் கொண்டிருந்தது. துண்டு மேகங்கள் ஒரே பெரிய கருப்புத் திரட்டாக மாற ஓடி உழைத்துக் கொண்டிருந்ததன. இப்பகுதியில் ஓங்கிப் பெய்ய திட்டம் இல்லாமல் துளிகளை மட்டும் சிதற விட்டுக் கொண்டிருந்தது. சாரலில் மனிதத் தலைகளில் குடை முளைத்து விட்டது. இன்று காலை ஊரே கழுவிப் பளபளத்தது. ஒரு இலையிலும் தூசி இல்லை. கருங்கல் ஜல்லிகள் மழையில் குளித்து மின்னுகின்றன.எதிர் பொட்டலில் போகிக்கு அடுக்கிய செங்கல் , பழமைச் சின்னங்கள் போல், மழையில் ஊறி முனையிழந்து மணலில் பதிந்தும் , பதியாமலும் நிற்கிறது . இரவு மழை வண்டிகளிலும், கைப்பிடிகளிலும் ஈரத்தை மிச்சம் வைத்துப் போயிருக்கிறது . காலைக் காற்று ஈரம் கொள்ளத் துவங்கியிருக்கிறது. மெட்ரோவில் ஏறி என்றும் போல் கடைசிப் பெட்டியில் உட்கார்ந்தேன். முதல் ஸ்டேஷன் ஆகையால் இருக்கை நிச்சயம். என்னைப் போல் பழக்கப்படவர்கள் கடைசிப் பெட்டியில் ஏறுவார்கள். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இறங்கியதும் அடுத்த ரயிலுக்கு படி நாலடியில் ...

வானில் பறக்கும் புள்ளெலாம்

Image
வானில் பறக்கும் புள்ளெலாம் ------------------------------------- இன்று காலையில் இருந்து ஏனோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஐந்து மணிக்கு விழிப்புத் தட்டி விட்டது. முதல் வெளிச்சத்தில் காபித் தம்ளருடன் வெளி வாசலுக்கு வந்தேன். எப்போதும் கண்கள் அந்தப் பட்ட மரத்தை நோக்கியே போகும். ஒற்றை மைனா சிறகை நெளித்து , காலை அறிவிப்பை பல முறை செய்தது, 'நான் இங்கு இருக்கிறேன்..நான் இங்கு இருக்கிறேன்'. ஒளி இன்னும் அந்த மரத்தை வரைந்து கொண்டிருந்தது. நீல வானத்தில் கருப்புக் கோட்டு ஓவியம். மரம் ஒளியால் கைகள் முளைத்து விண்ணைத் துழாவ ஆரம்பித்தது. உறைந்த கருப்பு மின்னல். மைனா அலகை இரண்டு முறை மரத்தில் தீட்டி, அடி வயிற்றில் உரசி மீண்டும் ஒரு முறை 'நான் இருக்கிறேன்'.நடத்துனர் ரிவர்ஸ் விசில் எழுப்பும் ஒலி...ரைட் ரைட் ..ரைட் ரைட் எதிர் வீட்டு அம்மாள் தென்னை விளக்கமாரை நீரில் பலமுறை கிழித்தார். இரண்டு முறை தரையில் தட்டி மீண்டும் நீரூற்றிய கல்லை உரசினார். கல்லும் துடைப்பமும் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டன. ஒரு தையல் குருவி கட்டுச் சுவரின் பின்னால் புதரில் இருந்து பறந்து சுவரில் அமர்ந்தது. தீ...

குருதிப் பூ

Image
குருதிப் பூ வரலாறு என்பது சம்பவங்களில் இருந்து திரண்டு தானாய் எழுந்து வருவது. தனி மனிதர்களால் ஆனது. அவர்களின் மனங்களால் ஆனது. ஒவ்வொருவர் எண்ணமும் அடுத்தவரை நெய்து ஊடு பாவியிருக்கிறது. மேலும் மேலும் என மனிதர்கள் சிலந்தியைப் போல் பின்னிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பூமி மாபெரும் சிலந்தி வலை. பின்னுபவர்களும் மனிதர்களே, அதில் சிக்கிக் கொள்பவர்களும் மனிதர்களே. சிலந்திவலையைப் பற்றி இவ்வாறு எழுதுவது வரலாறு ஆகிறது—கல்லில், சுவடியில், தாளில், கல்லறையில், அப்புறம் முக்கியமாக உதிரத்தில்... எத்தனையோ மன்னர் (எ) மனிதர்களின் ஆணவமும், காமமும் தொடர்பில்லாதவர்களை ரத்தத்தில் நனைத்திருக்கிறது. அன்று துரியோதனன் என்றால் இன்று ட்ரம்ப், நேற்று யாரோ வேறொருவர். வேலையில் சில நாட்களாய் இப்படித்தான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.  விஷயம் இதுதான்; இப்படிப் பின்னிப் போகிறது. சுருக்கிச் சொல்கிறேன். K-வுக்கு J-யைப் பிடிக்காது. K ஒரு குழுத் தளபதி. சிறு படை திரட்டி வைத்திருக்கிறார். இல்லை, வேண்டா வெறுப்பாகவும், வேறு வழியில்லாமலும் சிலர் அவருடன் இருக்கிறார்கள். காரணம், பிழைப்பு. K-வுக்கு வெளிக் கண்காணிப்பு வேலை. ...

ஒரு யாசித்தல்

Image
ஒரு யாசித்தல் ------------------  என்னுடைய நடைபாதையில் எனக்கு அது முக்கியமான இடம். நான் இருக்கும் இந்தச் சாலை பத்து வருடப் பழக்கம். சாலையே இல்லாமல் இருந்த காலம் தொட்டு, இப்போது இரண்டு வழிச் சாலை வரை. வழியில் ஒரே ஒரு டீக்கடை. ஐயங்கார் பேக்கரி. நானே பார்த்து எத்தனையோ கை மாறியிருக்கிறது. இப்போது எதிரில் ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது. கிழக்கே இருக்கும் கடையைப் பார்த்து முப்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. கடைக்குப் பின்னால் ஓடும் சாலையில் இறங்கினால் கோபசந்திரா கிராமம். சுரைக்காய் , திராட்சைத் தோட்டங்கள் பார்க்கலாம். அதுவே எனது வழிப்பாதை. நான் இங்கே போகும் மாலை வேளைகளில் , எதிர் நிற்கும் புளிய மரத்தின் பின்னால் முழு வானமும் தெரியும். இதைத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தொடுவானம் வரை விண்முட்டும் கட்டிடங்கள் எதுவும் சூரியனுக்குக் குறுக்கே வராது. எல்லாம் தாண்டி பொன்னொளி புளியமரத்தில் விழும். இலைகள் நுனிகளில் தளிர் ஒளி கொள்ளும். நாளில் ஓரிரு முறையேனும் இங்கு வந்து போவது என் வாடிக்கை. தலை பின்னிக்  கொண்டை முடிந்த பையன் பல வருடங்களாக ...

நேரத்தைக் கையாள நடைமுறை வழிகள் - ஜெயமோகன்

நேரத்தைக் கையாள வழிகள் - ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் காணொளி உரை கீழே இறுதியில் இருக்கிறது. இரண்டு முறை (80%-20%)  பார்த்து எழுதியது. செயல் என்பது காலத்துடன் இணைந்தது. காலத்தைக் கையாளுவதற்குப் பெயர் தான் செயல் எனப்படுவது. காலத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவனால் செயலாற்ற முடியாது, செயல் என்பது நேரத்தைச் செலவழிப்பது மட்டுமே.  காலத்தை எப்படி நடைமுறையில் கையாளுவது?.  சில பொன்விதிகள். 1. இது காலத்தை வீணாக்குகிறதா? தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்றவை நேரம் உறிஞ்சவே வடிவமைக்கப் பட்டுள்ளன. நம் நேரத்தை பிக் பாக்கெட் செய்கின்றன. நாளின் நேரத்தை இதில் விரயம் செய்கிறோமா என்ற கேள்வி பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும். 2. செயலில் குவிதல். ஒதுக்கிய நேரத்தில் ஒதுக்கிய செயலை மட்டுமே செய்ய வேண்டும். முழுமனதுடன், முழு கவனத்துடன் அந்த ஒரே செயலை மட்டும் ஆற்ற வேண்டும். இரண்டு வேலை செய்யலாகாது. இந்த நேரத்தில் வேறு எதுவும் நடுவில் குறுக்கிடக் கூடாது.  3. கோல்டன் டைம் :  காலை நேரம் ஆற்றல் உள்ளது. அதை முக்கியமான செயல்கள் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். கற்பனை உச்சத்தில் இருக்கும் நேரம். மாலை நேரங்களை ...

பாதாளக் காற்று ...

Image
பாதாளக் காற்று .... ------------------------ கோடை போய் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. ஊரின் ஒதுக்குப் புறம், காற்றைத் தடுக்க யாரும் இல்லை. மரங்களையும், செடிகளையும் சன்னமாய் ஆட்டிவிட்டுச் செல்கிறது. மீண்டும் திரும்பி வந்து மற்றுமொருமுறை.  யூக்கலிப்டஸ் மரம் யானையென தலையையும் காதையும் சரித்து ஆட்டியபடி இருக்கிறது. அதன் பக்கக் கிளையில் புல்புல் அமர்ந்து அலகை உரசித் தீட்டுகிறது. அதன் சிறகுகள் மெலிதாய் காற்றில் அசைகின்றன.  வெள்ளை வண்ணத்துப் பூச்சி படபடத்துப் பறந்து கடுக்கன் பூவில் அமர்கிறது. மலர் நுகர்கையில் அதன் சிறகுகள் அதிர்கின்றன. ரெட்டை வால் குருவி சுற்றுச் சுவரில் உட்காருகிறது. வாலில் தெரியும் இரண்டு கரு மீன்கள் காற்றில் அளைகின்றன.  புல்லின் தோடும், மடலும் லேசாக ஆடுகின்றன. ஒரு சிற்றெறும்பு காற்றில் திசை மாறிப் பின் வழி செல்கிறது.  பூக்களை உதிர்த்து இலை மட்டும் கொண்டுள்ள வசந்த மரத்தின் ஒரு இலை நிலத்தில் உதிர்கிறது. காற்று அதை இன்னொரு சருகுடன் தள்ளிச் சேர்க்கிறது. பின்னர் அவை கூட்டமாய் பிளாஸ்டிக் பை கசக்கும் ஒலியுடன் , பேச்சும், சிரிப்புமாய் கூடிப் பிரிகின்றன. தையல் க...

பிறந்த நாள் குறிப்புகள்

Image
 பிறந்த நாள் குறிப்புகள்  [1] (முன்னறிவிப்பு  : இது ஒரு படத்தொகுப்பு போலவோ  , இல்லை உதிர்ந்த பூக்கள் போலவோ இருக்கலாம். அப்படி இருந்தால் என் மனநிலையை சரியாய் பிரதிபலித்தது என்று கொள்வேன்) 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ...' https://www.youtube.com/watch?v=I2f66z7dUU0 இன்று இந்தப் பாட்டு காதில் படுவது தற்செயல் என்று கடந்து போகலாம். இப்போது இது காதில் விழ ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அதை ஒதுக்கித் தள்ள மனம் இல்லை. இரண்டு நாள் பின்னோக்கிப் போக வேண்டும். நடை பாதையில் செர்ரிப்  பூக்கள் நுரை போல் இன்னும் பூத்துக் கொண்டிருக்கின்றன.  செங்கொன்றைகள் தலை காட்ட ஆரம்பித்துள்ளன. குடியிருப்பின் மாந்தோட்டம் பூத்துத் தள்ளுகிறது.  வண்டுகள் அமர்ந்த இலைகள் கரும்புள்ளிகள் கொண்டிருக்கிறது.  இரண்டு நாள் முன் பெய்த மழையில் மாவடுக்கள் நிலத்தில் உதிர்ந்திருக்கிறன்றன. சிறு சேவலோ கோழியோ போல கிளிமூக்கு மாங்காய் தோன்றும் எனக்கு. 'அம்மா இருந்தா பொறுக்கி மாவடு போடுவாங்க ' என்றாள் அவள். 'சரி , பொறுக்குவோம் ' என்றேன்.  இருவ...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -3 - எழுத்தை முன்வைப்பது

Image
எழுத்தாளர்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா?  ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது? பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின்  இந்தப் பகுதி  பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ். கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் நிபந்தனைகளுக்கு  உட்பட்டு. என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர்  பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி  உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்)  என்றொரு டாக்டர் இதைச் செய்கிற...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -2 - எழுத்தின் செயல்முறை

Image
'எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா ?'.  அடுத்த பத்து நிமிஷத்திற்குள் இந்த இரண்டு விஷயங்களை எதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். 'எழுதுறது நூறு சதவீதம் இன்ஜினியரிங்...உட்கார்ந்தா அதுவா வரும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் பொய்...வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொல்றது...என்னளவில் எழுத்து ஒரு  தொழில் நுட்பம்..நுணுக்கங்களைக் தெரிந்து கொண்டால் எல்லோரும் எழுத முடியும்.' நானும் நல்ல எழுத்து அரை போத நிலையில் வருவது என்று எண்ணியிருந்தேன். கப்பல் நீரில் மிதப்பது போல். போத நிலையில் எழுத்தாளரின் உணர்ச்சி மேலிடுகிறது. அந்த இடத்தின் பாத்திரங்களின் உணர்ச்சியே அவருள் வர வேண்டும். அவர் எல்லோருக்கும் ஒரே உணர்ச்சியை காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதை எப்படிச் செய்வது என்று சொற்களால்வகுப்பது கடினம். படைப்பாற்றல் தெய்வக் கொடுப்பினையா? கற்றுக்கொள்ளவே முடியாதா?  படிப்பு தான் எழுத்தின் முதுகெலும்பு. அதில் பின்னித்தான் இதயமும், மூளையும், காலும், கையும் ரத்தத்தைப் பெறுகின்றன. நல்ல எழுத்து சுவாசம் என்றால் , வேண்டாத எழுத்து வெளியேறும் சுவாசம். செய்யும் வேலையைப் பொறுத்து உறுப்புகள் ஊட்டம் பெறுகின்றன. நெடுநாள...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

Image
ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 3

நாட்குறிப்பு  - 33/50  நேற்றைய காலை  'லெட்  மீ  மேக் யு லாப் திஸ் மார்னிங்  ' என்றார். உடன் வேலை பார்ப்பவர் , சந்தித்துச்  சிலநாட்கள் ஆகியிருந்தன. அப்படி அவர் சொன்னதுமே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'அவன் கேட்டான் எதைத் தேர்ந்தேடுப்பதென்று...நான் சொன்னேன்.   Ek toh kodhi, doosre khaaj ...samaj gaya   ராமுக்கு தொழுநோய் , இப்போது புதிதாய் அரிப்பு, எதைத் தேர்ந்தேடுப்பது... இல்லை ராமுக்காக நான் சொரிய முடியுமா சொல்லு' சொரிந்து காட்டி கைதட்டி புரளாத குறையாக சிரித்தார். 'இன்னொன்று..ஒரு பையன் அம்மாவிடம் சொன்னான்.  நான் எனக்குப் பிடித்தமாய்  பெண் பார்த்திருக்கிறேன்...நாளை , மூன்று பேரில் என்னவளை நீ கண்டுபிடிக்க வேண்டும் ' அந்த மூவரில் அவளை அம்மா சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். பையன் 'எப்படிம்மா' என்றான். அம்மா சொன்னாள் , 'அவளை மட்டுமே எனக்குப் பிடிக்கவில்லை' ரெண்டாவதைச் சொல்லி சிரித்து மறைந்தார்.  நாட்குறிப்பு  34/50 முடியாத படைப்பு  உலகில் படைப்புக்கு முடிவில்லை. சமைத்தல் என்றால் செய்தல், படைத்தல் என்றும் பொருள் இருக்கிறது....

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 2

நாட்குறிப்பு 21/50 - முதல் அத்தியாயம் எனது அலுவலகம் இருப்பது  நகரின் மையத்தில். எதிரில் கப்பன் பூங்கா , அடுத்த தெருவில் சட்டமன்றக் கட்டிடம். பக்கவாட்டில் கிரிக்கெட் மைதானம், MG ரோடு, சர்ச் ஸ்ட்ரீட். காலையில் எளிதில் தென்படும் காட்சி கல்யாண போட்டோஷூட். குறிப்பாக சர்ச் வீதியிலும் விதான் சௌதாவின் முன்னரும்.  கொஞ்சம் மேல்தட்டு என்றால் சர்ச் வீதி pub-முன் ஷூட்.  மிடில் கிளாஸ் என்றால் இன்றுபோல் விதான்சௌதா முன்னால் , பசவண்ணர் வெண்கலக் குதிரைச் சிலை தெரிய நடக்கும்.  தெரு விளக்குக் கம்பியில் மணமகன் ஒருகால் ஊன்றி நிற்க, பெண் சேலை நுனி பிடித்து நடந்து வர வேண்டும். முதல் மூன்று டேக் தோல்வியில் முடிந்தது. பையன் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். போட்டோக்காரர்கள் விடுவதாக இல்லை , சிக்கலாகத் தெரிந்தது. நான்காவது டேக்கில் மணப்பெண்ணுக்கு முதலில் இருந்த சிரிப்பு இல்லை. நானும் வந்துவிட்டேன், ஷூட்டும் முடிந்திருக்கும் . நாட்குறிப்பு  22/50 ஒரு எறும்பாவது... சாயங்கால ரயில், மேடையில் மண்புழு போல் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. என் போன்ற எறும்புகள் மனதினுள் தள்ளுமுள்ளிற்கு ஆயத்தமாகின. புழு...