எல்லோரும் இந்நாட்டு...
எல்லோரும் இந்நாட்டு... ------------------------------- பலவருடங்கள் முன் படித்த தேசாந்திரி புத்தகத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிட்டி பஸ் மாறி மாறி சென்னை வரை போய் வந்ததை ஒரு அனுபவமாக எழுதியிருப்பார். இவ்வகைப் பயணம் எனக்கு மிக இஷ்டம். இப்போது என்றாவது தோன்றி கட் ஜர்னீ செய்வதுண்டு. வேடிக்கை பார்த்தபடி போகலாம். மெட்ரோவில் நேற்று ஒரு குடும்பம். குட்டி அக்கா, கைக் குழந்தை தம்பி, அவர் அம்மா. தம்பி விரல் சூப்பி இரு கைகளிலும் வார்னிஷ் பண்ணி வைத்திருந்தார். இன்னும் வாய்க் கூழின் மீதம் வாயில் ஒட்டி இருந்தது. அக்கா அம்மாவிடம் தம்பியை வாங்கி, ரயில் கண்ணாடி பார்க்க திருப்பி நிறுத்தினார்.தம்பி கன்றென பலமுறை அவள் கைமீறிச் சந்தோஷத்தில் எம்பிக் குதித்தார். நீல வானமும், சுழலும் மரங்களும், உயர்ந்த கட்டிடங்களும் அவரை ஆச்சரியப் பட வைத்தன. அக்கா 'சூடு, சூடு, எட்ல போசுந்தி சூஸ்திவா....சூஊஊஊ அட்ல..எட்ல எட்ல சொப்பு..' என்றார். தம்பி பல முறை அவர் வாய் பார்த்து முடிவில் 'சூஊஊஊ' என்றார். விஷயம் என்னவென்றால் நேற்று சென்னை வரை பேருந்துகளில் போய் திரும்பி வந்தேன். சந்தாபுரா, அத்திப்பள்ளி, ஒசூர...