Posts

Showing posts with the label கட்டுரை

Translate

'மறக்க முடியாத மனிதர்கள்' - வண்ண நிலவன் - சென்ற தலைமுறை ஆடம்பரம்

Image
சில நாட்களாக வண்ணநிலவன் எழுதிய 'மறக்க முடியாத மனிதர்கள்' வாசித்துக் கொண்டிருந்தேன். மாம்பழந்தானே என்றாலும் எல்லோருக்கும் அதை லாவகமாய் நறுக்க வருவதில்லை. அப்பா நன்றாக ரசித்து மாம்பழம் வெட்டுவார். என் மாமனார் அதன் தோலை ஒரு பச்சைத் தடமில்லலாமல் சீவி எடுப்பார். அவருக்கு அது குழந்தை மென்மை. குழந்தைக்கு தலை மழிப்பது. அது எல்லா நாவிதர்களுக்கும் கை வருவதில்லை. என் பையன் முதல் தலைமழிப்பு, முடியெல்லாம்  ரத்தத்தில் ஒட்டி, கண்ணிலும், மூக்கிலும் நீர் கொட்டி போராய் முடிந்தது நினைவில் வருகிறது. ஒவ்வொரு தோலுக்கும் தனிக் குணம் இருக்கிறது. மேலும் எல்லாக் கத்திகளும் எல்லா வேலைகளையும் செய்வதற்கில்லை. கத்தியின் கூறும், தோலின் பதமும் அறிந்தவர் கை தேர்ந்த திருத்துநர் ஆகிறார். அப்படி மாம்பழம் வெட்டுவது போன்ற எழுத்து வண்ண நிலவனுடையது. அவரால் மறக்க முடியாத பத்து எழுத்தாளரகளைப் பற்றிய தொகுப்பு. படித்து முடித்தால் அவருடைய வாழ்வின் கோட்டுச் சித்திரம் மிக அழகாக வெளிப்படுகிறது. தன்னைச் சிறிதும் நடுவில் நிறுத்தாமல் எழுதிய தன் வரலாறு போல் தோன்றியது. யார் நெருக்கம், யாரிடம் வியப்பு, யார் சக எழுத்தாளர்கள் என்று ...

பிறந்த நாள் குறிப்புகள்

Image
 பிறந்த நாள் குறிப்புகள்  [1] (முன்னறிவிப்பு  : இது ஒரு படத்தொகுப்பு போலவோ  , இல்லை உதிர்ந்த பூக்கள் போலவோ இருக்கலாம். அப்படி இருந்தால் என் மனநிலையை சரியாய் பிரதிபலித்தது என்று கொள்வேன்) 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ...' https://www.youtube.com/watch?v=I2f66z7dUU0 இன்று இந்தப் பாட்டு காதில் படுவது தற்செயல் என்று கடந்து போகலாம். இப்போது இது காதில் விழ ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அதை ஒதுக்கித் தள்ள மனம் இல்லை. இரண்டு நாள் பின்னோக்கிப் போக வேண்டும். நடை பாதையில் செர்ரிப்  பூக்கள் நுரை போல் இன்னும் பூத்துக் கொண்டிருக்கின்றன.  செங்கொன்றைகள் தலை காட்ட ஆரம்பித்துள்ளன. குடியிருப்பின் மாந்தோட்டம் பூத்துத் தள்ளுகிறது.  வண்டுகள் அமர்ந்த இலைகள் கரும்புள்ளிகள் கொண்டிருக்கிறது.  இரண்டு நாள் முன் பெய்த மழையில் மாவடுக்கள் நிலத்தில் உதிர்ந்திருக்கிறன்றன. சிறு சேவலோ கோழியோ போல கிளிமூக்கு மாங்காய் தோன்றும் எனக்கு. 'அம்மா இருந்தா பொறுக்கி மாவடு போடுவாங்க ' என்றாள் அவள். 'சரி , பொறுக்குவோம் ' என்றேன்.  இருவ...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -3 - எழுத்தை முன்வைப்பது

Image
எழுத்தாளர்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா?  ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது? பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின்  இந்தப் பகுதி  பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ். கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் நிபந்தனைகளுக்கு  உட்பட்டு. என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர்  பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி  உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்)  என்றொரு டாக்டர் இதைச் செய்கிற...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -2 - எழுத்தின் செயல்முறை

Image
'எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா ?'.  அடுத்த பத்து நிமிஷத்திற்குள் இந்த இரண்டு விஷயங்களை எதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். 'எழுதுறது நூறு சதவீதம் இன்ஜினியரிங்...உட்கார்ந்தா அதுவா வரும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் பொய்...வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொல்றது...என்னளவில் எழுத்து ஒரு  தொழில் நுட்பம்..நுணுக்கங்களைக் தெரிந்து கொண்டால் எல்லோரும் எழுத முடியும்.' நானும் நல்ல எழுத்து அரை போத நிலையில் வருவது என்று எண்ணியிருந்தேன். கப்பல் நீரில் மிதப்பது போல். போத நிலையில் எழுத்தாளரின் உணர்ச்சி மேலிடுகிறது. அந்த இடத்தின் பாத்திரங்களின் உணர்ச்சியே அவருள் வர வேண்டும். அவர் எல்லோருக்கும் ஒரே உணர்ச்சியை காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதை எப்படிச் செய்வது என்று சொற்களால்வகுப்பது கடினம். படைப்பாற்றல் தெய்வக் கொடுப்பினையா? கற்றுக்கொள்ளவே முடியாதா?  படிப்பு தான் எழுத்தின் முதுகெலும்பு. அதில் பின்னித்தான் இதயமும், மூளையும், காலும், கையும் ரத்தத்தைப் பெறுகின்றன. நல்ல எழுத்து சுவாசம் என்றால் , வேண்டாத எழுத்து வெளியேறும் சுவாசம். செய்யும் வேலையைப் பொறுத்து உறுப்புகள் ஊட்டம் பெறுகின்றன. நெடுநாள...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

Image
ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

ஒரு செல்லின் பார்வையில்

Image
ஒரு செல்லின் பார்வையில்  ----------------------------------                                                                                      [1] இன்று நீங்கள் கால் கீழே ஒரு எறும்புப் புற்றையோ அல்லது ஒரு கரையான் புற்றையோ மிதித்தோ , இல்லை பார்த்தும் பார்க்காமலோ என்றும்  போல் கடந்து சென்றிருப்பீர்கள். எப்போதும் மலையை வியக்கிறீர்கள், இது எனக்கு விளங்கவில்லை . மாபெரும் மலையும் யுகம் யுகமாய் பெருகிக் கரையும் ஒரு புற்றே, இல்லையா.? நீங்கள் வியப்பதை மலைத்தல் என்கிறீர்கள். எப்போதும் மேலே பார்த்துத்தான் மலைக்க வேண்டுமா? உங்கள் உடம்புக்குள்ளே , உங்கள் கால் கீழே, பூமியின் உள்ளே மலைகள் இல்லையா? அதைத்தான் நான் இன்று சொல்லியாக வேண்டும். மார்கழி டிசம்பரில் சங்கீத, கலை கச்சேரி நடுவில் இப்படி ஒரு உபதேச வார்த்தைகள் சொருகினால் எடுபடாதா என்ற ஆசையும் தான். செல் என்றதும் நீங்கள் உடனே ச...

ஷீரான்னம்

Image
ஷீரான்னம் ------------ இப்போது மார்கழி மாதம் நடுவில் நிற்கிறது. பெங்களூரின் நிலைமையில் டிவி வழியாகத்தான் மார்கழி தெரியவர வேண்டும். டிவி இல்லாமல் பல வருடங்கள் தாண்டி இப்போது சில மாதங்களாய் டிவி வீட்டில் புகுந்திருக்கிறது. நடு வீட்டில் அது சிலுவையில் தூக்கி அறைந்தது போல் பரிதாபமாக நிற்கும்போது எப்போதாவது போட்டுப் பார்த்தே ஆக வேண்டியிருக்கிறது. மதுரையில் இருந்தால் மார்கழி தெரிவது வேறு விதம். காதில் யானைக் காதை குளிருக்கு மாட்டிப் பலர் நடமாடுவார்கள். அதிகாலை வீரமணியின் குரல் குழல் ரேடியோவில் கேட்கிறது. அய்யப்ப பக்தர்கள் சிறு கோவில்களை குத்தகைக்கு எடுத்து வேட்டி துண்டு காயவைத்து ,குளித்து சாப்பிட்டு கோயிலில் இருந்து கொண்டு வீட்டிற்கும் அவ்வப்போது போய் வருகிறார்கள்.  திருப்பரங்குன்ற முருகனும், அன்னை மீனாட்சியும் அய்யப்ப பக்தர்களுக்கும் , முருக பக்தர்களுக்கும் முழு நேர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். உள்ளூர்க்காரர்கள்இந்த இடைவெளி அறிந்து போகிறார்கள்.  ராஜகுலராமனின் மார்கழி இன்னும் வேறு விதம். மார்கழி முதல் தேதி ஆரம்பித்து பொங்கல் முடியும் வரை காலை மாலை குழல் ரேடியோ ஒலிக்கும். ச...

யோசிக்கும் வேளையில் - 1

Image
யோசிக்கும் வேளையில்  - 1 --------------------------------- சென்ற சில நாட்களாய் யோசிப்பதைப் பற்றி படித்தும் , யோசித்தும் பொழுது போய்க்  கொண்டிருக்கிறது. எழுதிவைத்தால் வசதி என்று நினைத்து எழுதுகிறேன். நான் பிறந்து வாழ்ந்த வீடு மிக நீளமானது. தெருவின் எல்லா வீடுகளும் அவ்வளவு நீளம் தான். ஐம்பது மீட்டர் இருக்கும். ஒரு நாளில் எவ்வளவு முறை வாசலும் புறமும் கடக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன். எல்லோருக்கும் கால்களில் வலு இருந்திருக்கிறது. தெரிந்தோ என்னவோ தலை வாசலில் ஒரு திண்ணை உண்டு. சரியாக உடம்பின் அளவே இருக்கும் திண்ணை அது.இதைப் போல் புறவாசலில் ஒரு துவைக்கும் கல் இருந்தது. அதை ஒட்டியவாறு கிணறு. கிணற்றை சுற்றிக் கட்டிய சுவர் முடியும் இடத்தில் இன்னொரு உயர்ந்த கருங்கல் மேடை இருந்தது. பின்னால் எங்கும் கண் முட்டும் அளவுக்கு பச்சை நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் இருந்தன. அருகில் ஓங்கி அடர்ந்து வளர்ந்த முள் மரங்கள், மஞ்சணத்தி, முருங்கை, அகத்தி மரங்கள் உண்டு. மூன்றாவது வீட்டு சம்சாரியின் ஒரு காளையும் , எருமையும் அதன் நிழலில் அசை போட்டுக் கொண்டிருக்கும். அருகில் மலைபோல் ஒரு வைக்கப்...

அறுசுவை அரசர்

Image
அறுசுவை அரசர்  --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...

திக்குத் தெரியாத காட்டில்

Image
திக்குத் தெரியாத காட்டில் ---------------------------------- கடந்த சில வாரங்களாக வேலை அதிகம். மேலிட வருகை, நன்றி காட்டும் தினம் (தேங்க்ஸ் கிவிங் டே)  வரும் எதிர்பார்ப்பில் ஆட்கள் வேலையை பொட்டணம் கட்டி முடிச்சை மட்டும் போடாமல் விட்டிருப்பார்கள். கேட்டால் கீழே அடியில் கிடக்கிறது, பையை நோண்டி எடுக்க முடியாது, மடிப்பைக் குலைக்க முடியாது , வேற ஆளைப் பார்க்க முடியுமா என்று கேட்பார்கள். லீவுக்கு முன் டேபிள்களை சுத்தமாய் பார்த்துக்கொள்வார்கள். மொத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலை பார்ப்பார்கள் , லீவில் போவார் லீவில் போவார், அவ்வளவே. வேலை ஜாஸ்தி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். சுற்றியுள்ளவர்கள் வேலை, நமக்கு பொறுப்பு என்றாகிறது. வேலையில் அழுத்தம் என்பது இப்போதெல்லாம் பல மடங்கு என எண்ணத் தோன்றுகிறது. நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த போது , எவ்வளவு வேலை இருந்தாலும் வேலையை அங்கேயே முடித்துவிட்டே வர வேண்டும். என்னுடைய முதல் கம்பெனியில் மதியமும் , இரவும் இரண்டு நேரம் உணவுண்டு. இரவில் கட்டணம் கிடையாது. இருந்து வேலையை இழுத்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். என்னுடன் படித்து முடித்து வேலையில் சேர்ந்த இரண்...

நல்லார் இருவர் உளரேல்

Image
நல்லார் இருவர் உளரேல் (புனைவு) -------------------------------------------- கூற்றுவன் யமன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனென்றால் குற்றமே இல்லை; யாரிடமும் கோபமும் இல்லை ; ஏனென்றால் எல்லாரிடமும் மேலான எண்ணங்கள் இருப்பதால்; நல்லறம் அன்றி செய்ய ஏதும் இல்லாததால் , நற்செயலின்றி தீய செயல் இல்லை; மேலே சொன்னது கம்பனின் பின்வரும் பாடலுக்குப் பொருள்.  'கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்; ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால், ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.' இதை அயோத்தி நகர் மக்களைப் பற்றி கம்பன் சொல்லும் போது வரும் பாடல். இது போல் கம்பன் எங்கு பார்த்து எழுதியிருப்பான் என்று தெரியவில்லை. இல்லை செய்ய வேண்டியதன் உச்சத்தைச் சொல்லும் பாடலா ? அவர் பார்த்த உண்மை என்னவாக இருக்குமோ கடவுளுக்கு மட்டும் வெளிச்சம். ஆனால் இன்று நடந்த அனுபவம் போல் கடைசியில் என்று நடந்தது என்று நினைவில் இல்லை. ஒளியை விளக்க இருள் தேவை, இல்லையா? அடுத்த சிறு பத்திகளில் எனக்கு ஏற்பட்ட ஒரு அடர் இருள் சம்பவத்தை உதாரணமாக  விளக்கி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  பதினைந்து வருடங்களுக்கு...