Skip to main content

சில கவிதைகள்

அலுவலகத்தில் வரம் கேட்டல்


கீழிருந்து மேலே 

வேண்டியது ஒன்று 

கேட்டதும்  ஒன்று 

 

அவருக்கு மேலே 

வேண்டியது ஒன்று 

கேட்டது மூன்று 


அவர் அவருக்கு மேலே 

வேண்டியது இரண்டு 

கேட்பது இரண்டு  


அவர் அவர் அவருக்கு மேலே 

இருப்பதையும் திரும்பக் கொடுக்க முடியுமா? 

இது தலை போகும் வேலையா ?

எதாவது கடன் வாங்கிச் செய்ய முடியுமா?

சரி மீண்டும் பார்க்கலாம்



மீண்டும் கீழிருந்து மேலே 

சரி இப்போது வேண்டியது ஒன்று 

கேட்பது இரண்டு 


யாவர்க்குமாம் ஓர் கைப்பிடி

டம்ளர் தட்டு
கரண்டி கிண்ணம்

மேலே குறுக்கி  கீழே கூம்பாக்கு
அடிக்  கனத்தை சற்று  ஏற்று
சுற்றளவைச் சிறிதேனும் குறை
குழியைக் கொஞ்சம் மேடாக்கு

வட்டமானால் சிறிதாய் அழகாய் ஆகுமா
திடமானதை இன்னும் தளர விடு
தளர்ந்ததை சற்றேனும் நீராக்கு
எதையும் பூப்போல்  நெகிழ்வாய் ஆக்கு 

சிறிய கை உடையவராய் 
யாருக்கும் கொடுத்து அறியாதவரை  
வேலைக்கு வை

பாராமுகம் காட்டி நிற்பவராய் எதிரில் நிற்பவரை
இரப்பவர் போல் கூசச்  செய்பவராய்  இருந்தால் நல்லது

அடுத்த கிண்ணம் கேட்கும்போது தட்டை எட்டிப் பார்க்கச் சொல்
கிண்ணத்தின் முகவரி திருப்பிப் பார்க்கச் சொல்

விலையை மேலும் ஏற்று
அளவை மேலும் குறை

இரு மொழிகள் 
-------------------
துரித கணக்கிடப்பட தாக்குதல்
துரித கணக்கிடப்பட தாக்குதல் 
 
துரித கணக்கிடப்பட்ட எதிர்வினை 
துரித கணக்கிடப்பட்ட எதிர்வினை 

கட்டுப்பாட்டுடன் நடக்கிறோம் 
கட்டுப்பாட்டுடன் நடக்கிறோம் 

அமைதி அவர்கள் கையில் 
அமைதி அவர்கள் கையில் 

பொறுப்புடன் நடக்கிறோம் 
பொறுப்புடன் நடக்கிறோம் 

அவர்கள் யோசிக்க வேண்டும் 
அவர்கள் யோசிக்க வேண்டும் 

பிரம்மாஸ்திரம்- அதைப்பற்றி ஒன்றும் புதிதாய் சொல்லவில்லையே  ' 
பிரம்மாஸ்திரம்- அதைப்பற்றி ஒன்றும் புதிதாய் சொல்லவில்லையே '

அவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் , வெளியே செல்ல வேண்டியதும் அவர்களே; 
அவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் , வெளியே செல்ல வேண்டியதும் அவர்களே; 

நேற்றிரவு கூரை பிளந்தது
தரையில் பள்ளம் விழுந்தது
காலருகில் எரிந்து புகை வந்தது 
ஆண்டவன் கருணையில் தப்பினோம்

நேற்றிரவு கூரை பிளந்தது
தரையில் பள்ளம் விழுந்தது
காலருகில் எரிந்து புகை வந்தது 
ஆண்டவன் கருணையில் தப்பினோம்

டிராபிக் சிக்னல் கவிதைகள் -8 அரிப்பு 


வண்டி ஒட்டிச் செல்லும்போது 

அடுத்த வண்டியை  ஓட்டுபவர் 

போன் பார்த்த படி ஒட்டுகிறாரா 

சிரமத்துடன் எட்டிப் பார்க்கிறேன் 


ஆம் அவர் பார்வை போனில் இருக்கிறது 

கிளர்ந்து கண்ணாடிக்குள் இருந்து 

உரத்த வசைகளை மொழிகிறேன் 


இப்படியே ஒவ்வொரு வண்டியாய்


காலம் என்பது


'லைவ் கிரிக்கெட் என்றால் என்ன?' என்று 

என் சிறு பையனைக் கேட்டேன் 


'பார்வேர்ட் பண்ண முடியாது   

அது தான் லைவ் கிரிக்கெட்' என்றான் 


டிராபிக் சிக்னல் கவிதைகள் -9 - இறை இறங்கி வருதல் 


அந்த டிவைடர் இல்லாத சாலையில் 

இருபுறமும் நகர வழியில்லாமல் 

வாகனங்கள் மூச்சடைத்து நிற்கின்றன 


ஒரு பசுக் கூட்டம்

சாலையைக் கடக்கிறது


தாய்ப் பசு தலையைத் தூக்கி 

நடக்க இடமில்லாமல்

சில நொடிகள் காத்து நிற்கிறது   


சிறு வழி கிடைத்ததும் 

அடுத்த சில கார்களை 

திறமையாய்  தான் கடந்தது  


நடைபாதையில் சுற்றுச்சுவர் தாண்டி    

தனக்கென தாழ்ந்து இருக்கும்  

குல்மோஹர் மர இலைகளை 

நாவால்  வருடும் இளையபசுவை 

முன்சென்று திரும்பிப் பார்த்தது


உடனே அது கீழிறங்கி சாலையில் 

இளவலுடன் பின் இணைந்தது 


இளவல் பின்னால்  நிற்கும் 

மோரிஸ் கராஜ் முன்னர் 

மூத்திரம் பெய்ததைப் பார்த்தது

அடுத்த காரின் பின் நிற்கும் அதற்க்கு

ஒன்றுக்கும்  இரண்டுக்கும் சேர்ந்து வந்தது 


ஹைப்பர் மார்ட்டின் ப்ளூ ட்ரம்மில்

ஒரே நேரத்தில் தலைவிட்டு 

மூவரும் கொஞ்சம் உண்டனர்


முதல் இளவல் ஹைப்பர் மார்ட் 

உள்ளே செல்லும்  இளம்பெண்ணின் 

மஞ்சள் மேல்ச்சட்டையை நுகர நினைத்தது


மெல்லிய மழை சாலையை புதிதாக்கியது  

மேற்கில் வானம் பொன்னொளி காட்டியது

குல்மோஹர் இலைகள் படபடத்து  பொன்மஞ்சளாயின 

வெண் கொக்கு ஒன்று தாய்ப் பசுவின் மேல் 

பறந்து வந்து அமர்ந்தது      

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...