Skip to main content

வாழ்வின் மெய்யறிதல் : ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -1

ஆர்தர் ஷோப்பனோவர் என்னும் பெயரை கடந்த ஒரு சில மாதங்களாக அங்கங்கு கேட்டுக் கொண்டே இருந்தேன். அண்மையில் போரும் வாழ்வும் படிக்கும் போது , டால்ஸ்டாய் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். இவரும் ஒரு செல்வந்தராய் பிறந்து, தத்துவவாதியாய் ஆனார்.  ஒரு சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்தவுடன் ஏனோ தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு அத்தியாயமாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன். 



முன்னுரை 

வாழ்வில் மெய்யறிவு என்றால் என்ன என்பதை பின் வரும் பக்கங்களில் விளக்க முயற்சிக்கிறேன்.

வாழ்வின் மெய்யறிதல் என்பதை உச்சமான மகிழ்ச்சியையும், வெற்றியையும் வாழ்க்கையில் அடைவது என்று சொல்லலாம். மகிழ்ச்சியான இருப்புக்கு தேவையான ஒரு கோட்பாடு.  இதை eudaemonolgy - (eudaemonism) என்று அழைப்பேன்.

நம் இருப்பு புறவயமானது போல் தோன்றினாலும், மெய்யறிவு பற்றிய கேள்வி என்றுமே அகவயமானதாகும். ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கும், இறப்பைப் பற்றி அறியவும், எவ்வாறு சந்தோஷமான இருப்பு முடிவில்லாமல் இருக்க முடியும் என்பதற்கும் மெய்யறிவைப் புரிந்து கொள்வது அவசியம்.

தத்துவார்த்தமான அடிப்படையில் மனித வாழ்வு இக்கோட்பாட்டினுள் வரும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியான வாழ்வு இதனால் கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியும். என்னுடைய முந்தைய முக்கியமான பணியில் (ch 49) இந்த இடத்தில் நான் பிழை செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். இதனால் இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆராயும்போது , என்னுடைய இந்த மெய்யியல் ,அறவியல் கோட்பாடுகளுக்கு நானே சரணடைய வேண்டியதாயிற்று.  ஒவ்வொரு நாளும் என்னுடைய முந்தைய பிழையை எண்ண வேண்டியிருந்தது.  ஆகவே , இதனுடன் குற்றம் சேர்த்தே நான் கூறும் மகிழ்ச்சி பற்றிய  இக் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வின் மகிழ்ச்சி என்பதே ஒரு மறை பொருள் ஆகும்.

இந்த கோட்பாடு தன்னளவில் முழுமையானது என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால், முன் சொன்ன எல்லாவற்றையும் திரும்பச் சொல்வது என் நோக்கம் அல்ல.

இதைப் போல நம் முன் உள்ள ஒரு புத்தக உதாரணம், “Cardan's De utilitate ex adversis capienda”, இதை இங்கு இணைத்துப் படிக்கலாம். அரிஸ்டாடில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பற்றி Rhetoric ஐந்தாம் அத்தியாயத்தில் எழுதியுள்ளார். ஆனால் இக்கட்டுரையை அதனுடன் ஒப்பிட முடியாது. இதற்கு முன்னால் இவ்விஷயத்தில் என்னவெல்லாம் கூறப் பட்டுள்ளது என தொகுப்பது என் நோக்கமல்ல. என்னுடைய தனிப் பட்ட கருத்தையே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பொதுவாக எப்போதுமே எல்லா மாபெரும் அறிவாளிகள் ஒரே விஷயத்தையே சொல்லி வந்திருக்கிறார்கள், எண்ணிக்கையில் அதிமாக உள்ள மூடர்கள் எப்போதும் சொல்லியதற்கு எதிராகவே நடந்திருக்கிறார்கள். இங்கும் அப்படித்தான் நடக்கும். வால்டர் சொல்லியது போல் "“we shall leave this world as foolish and as wicked as we found it on our arrival”


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...