ஆர்தர் ஷோப்பனோவர் என்னும் பெயரை கடந்த ஒரு சில மாதங்களாக அங்கங்கு கேட்டுக் கொண்டே இருந்தேன். அண்மையில் போரும் வாழ்வும் படிக்கும் போது , டால்ஸ்டாய் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். இவரும் ஒரு செல்வந்தராய் பிறந்து, தத்துவவாதியாய் ஆனார். ஒரு சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்தவுடன் ஏனோ தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு அத்தியாயமாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
முன்னுரை
வாழ்வில் மெய்யறிவு என்றால் என்ன என்பதை பின் வரும் பக்கங்களில் விளக்க முயற்சிக்கிறேன்.
வாழ்வின் மெய்யறிதல் என்பதை உச்சமான மகிழ்ச்சியையும், வெற்றியையும் வாழ்க்கையில் அடைவது என்று சொல்லலாம். மகிழ்ச்சியான இருப்புக்கு தேவையான ஒரு கோட்பாடு. இதை eudaemonolgy - (eudaemonism) என்று அழைப்பேன்.
நம் இருப்பு புறவயமானது போல் தோன்றினாலும், மெய்யறிவு பற்றிய கேள்வி என்றுமே அகவயமானதாகும். ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கும், இறப்பைப் பற்றி அறியவும், எவ்வாறு சந்தோஷமான இருப்பு முடிவில்லாமல் இருக்க முடியும் என்பதற்கும் மெய்யறிவைப் புரிந்து கொள்வது அவசியம்.
தத்துவார்த்தமான அடிப்படையில் மனித வாழ்வு இக்கோட்பாட்டினுள் வரும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியான வாழ்வு இதனால் கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியும். என்னுடைய முந்தைய முக்கியமான பணியில் (ch 49) இந்த இடத்தில் நான் பிழை செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். இதனால் இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆராயும்போது , என்னுடைய இந்த மெய்யியல் ,அறவியல் கோட்பாடுகளுக்கு நானே சரணடைய வேண்டியதாயிற்று. ஒவ்வொரு நாளும் என்னுடைய முந்தைய பிழையை எண்ண வேண்டியிருந்தது. ஆகவே , இதனுடன் குற்றம் சேர்த்தே நான் கூறும் மகிழ்ச்சி பற்றிய இக் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வின் மகிழ்ச்சி என்பதே ஒரு மறை பொருள் ஆகும்.

Comments
Post a Comment