Skip to main content

சைக்கிள் பதிவுகள் -3 - பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை

 பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை 




-விழித்து எழுந்தவுடன்  உள்ளங் கால் முதலில் டைல்ஸ்-ல் படும் தருணம் 

-தோலில் விழும் அன்றைய முதல் துளி தண்ணீர் 

--பிரிட்ஜ் கதவின் அன்றைய முதல் திறப்பு, முதல் இருமல், முதல் மூக்கு உறியும் ஒலி    

-பால் பாக்கெட்டை அன்று கை தொடும் நேரம்

-அன்றைய balcony கதவு திறப்பு...ரோட்டில் தெரியும் அமைதியில் எங்கிருந்தோ கத்தி  போல் பாயும் , ஒரே ஒரு ஆட்டோ எழுப்பும் நீண்ட ஒலி, எங்கோ சுவருக்குள் பிளாஸ்டிக் பைப்பில்  மோதும்  டாய்லெட் தண்ணீர், அடுத்த வீட்டின்  பாத்ரூம் flesh ஒலி, திறந்தவுடன் குழாய்த் தண்ணீர் சிங்க்-ல் எழுப்பும் ஓலம், சில மணித்துளி மழையும், இடியுமாய், மேல் வீட்டில் தரையில் இழுக்கப்படும்  நாற்காலி 

- ஜனவரி ஒலிக்கான மாதமும் கூட.       







-தவறி சைக்கிளின் சில்வர் பாகத்தில் கைகள் பட்டு கலையும் தூக்கம்  

-உள்ளங்கையில், விரல்களுக்கிடையில் பரவிச் செல்லும் காற்று. உடம்பின் ஜன்னல்களும் , கம்பிகளும்

-உரசும் உள்ளங்கைகள், ஊதும் வாய்கள் , கால்ச்சட்டைக்குள் ஒளியும் கைகள் 

-வெள்ளைக் கேரி பாக்கிற்குள் போட்டு மேலே லேசாக முடிச்சிடப்பட்டுள்ள நகரம்.  நிதமும் தானாகவே தளரும் முடிச்சு

-முக்கோணம்  - டீ , சிகரெட் , வெயில்

-வெயிலுக்கு முகம் காட்டி, குத்த வைத்து சும்மா உட்காந்திருக்கும் ஒரு நேபாளிக் குடும்பம்

-இட்லி வடை சாம்பாரில் இருந்து எழும் வெள்ளை ஆவி, பிரிட்ஜின் குளிரை விடாத தேங்காய் சட்னி

-ஒரு முதியவர் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டு , சக்கர நாற்காலியில் ஏற்றப்பட்டு மருத்துவமனையினுள் நுழைகிறார்.

-அதிகாலைக் குளிரில் பறவைகள் ஏனோ சத்தமிடுவதில்லை, பறப்பதில்லை. நிதானமாக எட்டு மணிக்கு சிறிது பறக்கின்றன. திரும்பி வந்து வந்து வயர் கம்பியில் அமர்கின்றன. உடம்பைக்  குறுக்கி இறக்கைகளை  ஜாக்கெட் போல் ஊத வைக்கின்றன...முகத்தை சிறகிலே நுழைத்து எடுத்த வண்ணம் உள்ளன 

-பருந்துகள் வானத்தின் யானைகள். இறகுகள் அசைவதே இல்லை. நீல நிற வானத்தில் , பனியில் சறுக்குவது போல் சறுக்கி , திரும்பி மேலேறி திரும்பி சறுக்கி....

-புறாக்கள் குதிரை போல் படபடத்தபடியே இருக்கின்றன. விர்ரென்று வானில் பறப்பு, மறுநிமிடம் கீழிறங்கி சில தத்தித் தாவல்கள், பின் மறு பறப்பு...

-காணக் கிடைக்காத பனித்துளி ...    


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...