Skip to main content

சைக்கிள் பதிவுகள் -2 - ஒரு சிறிய கணக்கு & ஒரு உரசல்

ஒரு சிறிய கணக்கு:

வீட்டில் இருந்து ஆபீஸ் செல்லக் கடக்க வேண்டிய சிக்னல்கள் : 17

சிக்னல்கள் பெரும்பாலும் auto mode-ல் ஓடுகின்றன. டிராபிக் போலீஸ் அவரே இயங்கச் செய்தால் டிராபிக் கிழிந்தது என்று அர்த்தம். ஆகவே இதை விட்டு விடலாம்.

இந்த கணக்குக்காக ஆட்டோ மோட் என்று வைத்துக் கொள்வோம்.

ஆட்டோ மோட் சிக்னல் இயங்கும் விதத்தை இவ்வாறு கூறலாம். 24 மணி நேரத்தை 8 கூறாக பிரிக்கிறார்கள். இரவு 12லிருந்து 7 மணி வரை சிக்னல் கிடையாது. 1) 7-8 2) 8-11 3) 11-5 4) 5-6 5) 6-9 6) 9-10:30  7)10:30 - 11:30 8) 11:30 - 12:00

ஜங்ஷன்-ஐப் பொறுத்து ட்ராபிக்கை 4 அல்லது 5 கட்டமாக  (phase) பிரித்து இருக்கிறார்கள். இதை ஒரு திசையில் வண்டியில் உள்ளவர் ரோட்டைக் கடக்கும் வாய்ப்பு எனலாம்.  நடப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த ஒரு வாய்ப்பு காலை 9 மணியில் இருந்து இரவு  9 மணிக்குள் கடந்தால் 40 - 60 நொடிகள் (பச்சை விளக்கு). அடுத்த வாய்ப்பு அடுத்த 3 லிருந்து 4 நிமிடங்கள் கழித்து. அதாவது சிகப்பு விழுந்த பின் காத்திருப்பு,  cycle time என்பது. சாம்பிளுக்கு ஒன்று கீழே.

https://data.opencity.in/dataset/bengaluru-city-traffic-signal-data/resource/bengaluru-city-traffic-police%2c-signal-timings-data---ngv-rear-gate-%26-sony-world-koramangala-junctio

ஒரு சிக்னல் ஒரு நிமிடமே என்றாலும் 17 நிமிடங்கள் சிக்கனல்களில் நின்று கழிக்க வேண்டும். அன்றைய ராசியைப் பொறுத்து இது கூடவோ (எல்லாமே ரெட் ) குறையவோ (எல்லாமே க்ரீன் ) ஆகும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நேரம். இது ஒரு ஆப்டிமிஸ்டிக் கணக்கின் படி.

முடிவில் சைக்கிள் வேகத்துக்கு வந்து விடுவீர்கள் ~16/17 kmph . இந்த நிற்கும் நிமிடங்கள் சைக்கிளின் பொன்னான வாய்ப்பு. 


ஒரு உரசல்:

Swiggy Stock Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

அப்போது தான் அந்த கார்  TVS-50 -ஐ  உரசி விட்டுச் சென்றது. அதில் இருந்தவர் எவ்வாறோ தடுமாறி வண்டியை விழாமல் நிறுத்தி விட்டார். இது வேகத்தடைக்கு சற்று முன் என்பதால் ஆள் கீழே விழவில்லை. இடித்த வண்டி நிற்காமல் சென்று விட்டது.

ஆனால் இவர் பின்னால் மூன்றும் , காலுக்கு இடையே ஒன்றுமாய் நான்கு கரி மூட்டைகளை வைத்துக் கட்டி இருந்தார். கித்தான் பைகளில் இருந்து கரி அங்கங்கே வெளியே வந்து கொண்டு இருந்தது. அதில் சாய்ந்தே அவர் ஓட்டியிருக்க வேண்டும். காலில் இருந்த செருப்பெல்லாம் கரியாக இருந்தது. முகமும், உடலும், முதுகும் கரிக்கோடுகளாய் இருந்தது. அவரின் சிவப்பு நிறம் கரியை இன்னும் எடுப்பாக்கியது. 

நான்கு மூடைகளும் கீழே விழுந்து விட்டிருந்தன. அவர் தடுமாறியதில் இடத்திற்கு ஒன்றாய் கிடந்தன. 

கார்களும் , வண்டிகளும் அவரைக் கடந்த வண்ணம் இருந்தன. ஹார்ன் ஒலிகள் சத்தமாக கேட்கத் துவங்கின. அந்த மூட்டையை அவர் ஒருவரால் தூக்க முடியவில்லை. காலின் இடையில் இருந்ததை திருப்பி வைத்து விட்டார். அந்த இடத்தில இருந்த கடையின் முன்னால் எப்போதுமே கூட்டம் இருக்கும். ஆனால் அவர் யாரையும் பார்க்கவோ , சட்டை செய்யவோ இல்லை.  பின்னால் ஒரு மூடையை அவரே தூக்கி வைத்து விட்டார். 

இப்போது இரண்டாவதை தூக்கி அதன் மேல் வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் தூக்க அவரால் முடியவில்லை, மூடை கீழே விழுந்தது. அவர் பார்ப்பாரா என்று நோக்கினேன். சைக்கிளை நிறுத்திவிட்டு போவோமோ என்று யோசித்தேன்.

எங்கிருந்தோ ஒரு swiggy பனியன் , அவரை நோக்கிச் சென்றது. இருவரும் சிரித்தனர். அதன் இரு கரங்கள் கரி மூட்டையை தொட்டு தூக்கின. 


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...