Skip to main content

வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - நூல் பதிவு



vasippathu eppadi/வாசிப்பது எப்படி? 

நாம் பொதுவாக புத்தகங்களைப் படிப்பது என்பது 'ஒரு' புத்தகத்தை எவ்வாறு படித்து புரிந்து கொள்வது என்று எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை வாசித்தல் என்பது ஒரு process - செயல் முறை ஆகும். இதை செய்து பார்த்து , படித்துப் பார்த்து, பேசிப் பார்த்து  refine செய்து கொள்ளலாம் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது. 

முக்கியமாய் syllabus, வேலைப்  புத்தகங்களுக்கு மேல் ஏன் படிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆசிரியர் கல்லூரி மாணவர்களையும் இளம் வாசகர்களையும் இலக்கியத்திற்குள் ஏன் வர வேண்டும் என்று படிப்படியாக விளக்குகிறார். compelling ஆக இருக்கிறது. ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.

புத்தகத்தை கையில் வைத்துள்ள ஒருவரை போலீஸ் சந்தேகிப்பதில்லை என்கிறார். இது உண்மை என்றே நினைக்கிறேன்.இவர் செல்லும் பேருந்தில் இவருக்காக லைட்டை இரவில் எரிய விடும் ஓட்டுநர் இருக்கிறார். ஒரு நல்ல சூழியல் புத்தகம் படித்தவர் பீர் போத்தலை காட்டில் உடைக்க மாட்டார் என்கிறார். ஜெயலலிதாவுக்கும் செம்மீன் கதாநாயகிக்கும்(ஷீலா ) உள்ள வித்தியாசம் வாசித்தல் என்கிறார். இரண்டு பேரும் நண்பர்கள். பட வெற்றிக்குப் பின் இருவரும் தனி வீடு கட்டுகிறார்கள். ஷீலா பவுண்டைன் வைத்து கட்டுகிறார். ஜெயலலிதா வேதா இல்லத்தில் 2000 சதுர அடி நூலகம் அமைக்கிறார். ஜெயலலிதா கையில் Jeffrey Archer புத்தகத்துடன் MGR உடன் நிற்கும் புகைப்படம் உள்ளது. மித்தாலி ராஜ் பேட்டிங் செய்ய காத்திருக்கும்போது புத்தகம் வாசிக்கிறார். விராட் கோலி படிக்கிறார்.

விடியோக்கள் பார்த்தும் , ஆடியோ கேட்டும் கற்று கொள்ள முடியாதா? இதுவரை பார்த்தோ கேட்டோ மட்டுமே பெரிய ஆள் ஆனவர் இல்லை. விடீயோக்கள் செல்லும் வேகத்தில் எண்ணங்கள் தோன்ற முடியாது. கற்பனை சாத்தியம் குறைவு.

வாசிப்பை மூன்றாய் பிரிக்கிறார். 

1. வாழ்க்கைக்கு உதவும் படிப்பு -   பாட புத்தகங்கள், வேலை, துறை சார்ந்த புத்தகங்கள், தினசரிகள் - பேப்பர்களை தூக்கி பிடிக்கிறார். நான் சில வருடங்களாக பேப்பர் படிப்பதில்லை. தகவல்களுக்கு உதவும் தான்.

2.வாழ்க்கையை புரிந்த கொள்ள உதவும் வாசிப்பு - இதையே இலக்கிய வாசிப்பு என்கிறோம்.

3.பொழுது போக்கு வாசிப்பு - சினிமா,வார இதழ்கள் போன்றவை. குறைக்க வேண்டியவை.

பெரும்பாலும் விடாமல் படிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். ஒரு புத்தகம் முடித்து அடுத்தது - இது என் பிரச்சனை. சரியாக தொகுக்க முடியாது. குறிப்பு எடுக்க வேண்டும். device குறுக்கீடு இல்லாமல் படிக்க வேண்டும். ஒரு நாள் 30 நிமிடம் படித்தால் , ஒரு வருடத்தில் 20 பக்கம் உள்ள  65 புத்தகங்கள் படிக்க முடியும். இது ஒரு சாதனையாகவே இருக்கும்.

50 இலக்கிய நூல்களின்  பட்டியல் இணைத்துள்ளார். சவால் தான்.

என்னுடைய ஆரம்பப் பள்ளி வகுப்பு ஆசிரியர் திரு.ராமராஜ்  தினம் பள்ளி முடியும் முன் 30 நிமிடம் ஒரு கதைப்  புத்தகத்தை தினமும் மாணவர் மத்தியில் உரக்கப் படிப்பார். விட்ட இடத்தில் மறுநாள் தொடர்வார். அவரும் படிப்பது எப்படி என்றுதான் சொல்லி இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...