Skip to main content

சில கவிதைகள்

அடியின் அட்டவணை


சரியாக மாலை ஆறு முப்பது

எதோ ஒரு குட்டை கவுன் பெண்
யாராவது இரண்டு பழைய வீரர்கள் சொல்லும்
நேற்று அடியைப் பார்

போனைத் திற
இன்ஸ்டாவைத் துளாவு
பேஸ் புக் என்னவென்று பார்
வாட்சப் பார் ஒருமுறை

மணி ஏழு

இரண்டு வயதானவர்கள்
அதே குட்டை கவுன் பெண்
இன்றைய அடிக்கான திட்டங்களைப் பார்  
கொஞ்சம்

ndtv
நியூஸ் 18
இந்தியா டுடே
எக்ஸ்பிரஸ் பார் சிறிது
இவை வழி ட்விட்டர் சென்று
முடியும் பொழுது திரும்பி வா


இடையில் ஆணுறை விளம்பரம் வந்தால் 
தலை நிமிர்ந்து பார் 
சிறிது   

மணி ஏழு முப்பது

அடி
அடி
இன்னும் அடி
ஐயோ...எத்தனை கோடி
ஏன் அடியில்லை

போன முறை இங்கிருந்தாரே 
ஏன் அவர் அங்கே 
அங்கிருந்த இவர் 
ஏன் இங்கே மட்டும் இப்படி 

அடி
அடி
இன்னும் அடி
தரையில் விடாதே
வானில் மட்டுமே விடு

மணி ஒன்பது இருபது

ஏன் அடிக்கு அடி
ஏன் அடிக்கு அடி
மௌனம் இல்லையா
மௌனம் இல்லையா

மணி பதினொன்று

இவரா அவரா
இதுவா அதுவா
இன்னும் தெரியவில்லை

மணி பதினொன்று பத்து

கடைசியாய் அட்டவணையைப் பார்
கீழிறங்கியது மேலேற வழி என்ன என்று பார்

மறக்காமல் நாளை என்ன என்று பார்.

டிராபிக் சிக்னல் கவிதைகள் -1

இன்று காலை குளிரூட்டப்பட்ட 
காரை ஒட்டிச் சென்று கொண்டிருக்கிறேன்

குறுக்கே மறித்துக் கடக்க யாரும் இல்லை
வாயில் இருக்கும் கெட்ட வார்த்தையை  
வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

டிராபிக் சிக்னல் கவிதைகள் -2

சிவப்பு விளக்கில் இருந்து 
நெடுந்தொலைவில் காரில் நிற்கிறேன் 
மலையில் வழியும் சிறிய சிற்றோடை போல்
என் முன்னே சாலையில் கடைசிவரை 
ஈருறுளி செல்ல வழியிருக்கிறது

ஒரு ஈருறுளி கடந்து சென்று 
முன்னே முதலில் நின்றது 
பின்னே இரண்டாவது சென்றது 

மூன்றாவதின் பாதையை இப்போது 
காரை மறித்து மூடினேன்   

டிராபிக் சிக்னல் கவிதைகள் -3 - எதிரும் புதிரும் 

போகும் பாதையில்  
பாதி அடைபட்டிருக்கிறது 
அந்த இடத்தில்  

எனவே வரும் பாதையிடம் 
போகும் பாதை பாதி 
கடன் வாங்க வேண்டியிருக்கிறது  

வருபவர்கள் கொடுக்க மறுத்தார்கள்
செல்பவர்கள் விட மறுத்தார்கள் 

ஒருவர் சட்டென்று ஏறி
நடைபாதையை வழிப்பறி செய்தார் 
பின்னர் எல்லோரும் செய்தனர். 

எண்களில் அடங்க முடியாமல் போதல்

இன்று உடன் வேலை பார்க்கும் ஒருவர் வேலையை இழந்தார்

இல்லை...தேவையில்லாமல் ரோஷப் பட்டு விட்டார்
இல்லை...இடித்துத் தள்ளப் பட்டார்
இல்லை...வட்டத்திற்க்கு வெளியே விழுந்து விட்டார்
இல்லை...வரிசையில் கடைசியில் வந்து விட்டார்
இல்லை...எண்களில் அடங்காமல் போய் விட்டார்
இல்லை...வெண்ணெய் தடவாமல் இருந்து விட்டார்
இல்லை...அவ்வப்போது கத்தியை காட்டாமல் விட்டு விட்டார்
இல்லை...வேலை அதிகம் என்று நினைத்துவிட்டார்
இல்லை...பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கிவிட்டார்
இல்லை...தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்
இல்லை...இருப்பது போதும் என்று எண்ணி விட்டார்

இல்லை...கொஞ்சம் நிம்மதியாக இருக்க நினைத்தார்     

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...