பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை
பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை -------------------------------------------------------------------------- நேற்று அலுவலகத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் பகுதியாக வேலை பார்க்கும் இடத்தை அலங்கரித்தார்கள். இந்தியாவின் நுழைவாயில் என்ற மையக் கருத்தென ஒரு குழுவின் அலங்கரிப்பு இருந்தது. நுழைவாயிலில் பறக்கும் கொடி, அதை நோக்கி இருந்த ஏவுகணைகள், விமானங்கள். இதன் நடுவில் இருந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர். சுதந்திரத்தின் படிமம் இவ்வாறு தான் நம்மில் பதிந்துள்ளது. அது இதுமட்டும் தானா?, உண்மையில் இந்தியாவின் வெளிநோக்கிய அந்த நுழைவாயில் கல்வி இல்லையா? அன்றும் இன்றும் பட்டம் என்பதும் டிகிரி என்பது நம்முடைய வாழ்வை திருப்பிப் போடுவதாக இருக்கிறது. படித்தால் வேலை கிடைக்காது என்ற ஒரு செய்தித் துணுக்கு இதை எழுத வைத்தது. பெங்களூரின் அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வுகளை ஒட்டி எழுதிய எனது கட்டுரை. இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியுள்ளது. https://madraspaper.com/unemployment-graduates/