Posts

Translate

ஊர் சுற்றி ஒழுக்கம் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

ஊர் சுற்றி ஒழுக்கம் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை பல வருடங்கள் முன்பு முதல் முறை வெளிநாடு சென்றது நினைவில் வந்தது. அன்றாடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதே கலவரத்தை உண்டு பண்ணியது. முதலாவது விமான நிலையம், அடுத்தது விமானம், போன்ற இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள். பிராங்க்பர்ட் ஏர்போர்ட்டில் இந்தியா செல்லும் டெர்மினல்களை எளிதில் அடையாளம் காண முடியும். பைகளை இருக்கையில் வைத்து அமர்ந்திருப்பவர்கள் , உரக்கப் பேசுபவர்கள், ஓரத்தில் கீழே படுத்து பையை தலையடியில் வைத்து உறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன். போர்டிங் துவங்கும் போது இருக்கை வரிசையாய்க் கூப்பிடுவார்கள். நம்மவர்கள் அதைக் காதில் வாங்க மாட்டார்கள். ஒரு வழியாக உள்ளேபோனால், நம்முடைய பை வைக்கும் இடம் களவு போயிருக்கும். நானும் இதையெல்லாம் இளவயதில் செய்திருக்கிறேன். சமைக்கும் போது ஸ்மோக்கிங் சென்சார் புகையடித்து தீயணைப்புத் துறை கதவை உடைத்து, நான் MTR புளியோதரை மிக்ஸ் கருக்கியதைப் பார்த்து ஆச்சர்யமானர்கள். 800 யூரோ தண்டம் போட்டார்கள். இதைப் பற்றிக் குழுவில் பேசும்போது, இது ஏற்கனவே நடந்திருக்கிறது. தீர்க்க வழியும் இருக்கிறது என்றார்கள். அத...

பாரதியார் - ஒரு ஆவணப் படம்

Image
பாரதியார் - ஒரு ஆவணப் படம் -------------------------------------- வீட்டில் தொலைக்காட்சி வந்த புதிதில் , சியோலில் ஒலிம்பிக் நடந்து கொண்டிருந்தது. பையனாய் எனக்குப் பார்க்கவேண்டியதெல்லாம் கிரிக்கெட் மட்டுமே. எனக்கு திரைப்படங்களில் அப்போதும் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் துயரங்களை எதற்கு நாம் பார்ப்பது என்ற எண்ணம். நமக்கு நாமே நிறையப் படுவதற்கு இருக்கையில் எதற்கு வீணாய் என்ற என் புரிதல். பார்த்தாலும் சரியாக சோகம், துயரம் ஆரம்பிக்கையில் எழுந்து போய் விடுவது என் வழக்கம். இன்றும் அதே கொள்கை தான். கிரிக்கெட் தாண்டி நான் விரும்பிப் பார்த்த விஷயம் கிருஷ்ணசுவாமி எடுத்த ஆவணப் படங்கள். எப்போதாவது Nat geo டேவிட் அட்டன்பரோ படங்கள் மதியங்களில் காண்பிப்பார்கள். இதற்கும் கலர் டிவி இருந்தால் நல்லது. பெரும்பாலும் கருப்பு வெள்ளையே இருக்கும். ஆவணப் படங்களில் வரும் பேசுபவரின் குரல் இன்றும் வசீகரிக்கிறது. உதாரணமாக கிருஷ்ணஸ்வாமியின் ரமணர் பற்றிய ஆவணப் படம் திருவண்ணாமலையை தூரத்தில் இருந்து காட்டுவதில் துவங்குகிறது. ஊரின் வீடுகள் மலையின் கீழ் சிறு கற்கள் என மண்டிக் கிடக்கின்றன. நகரம் செங்கல் குமியலாய் தெரிக...

அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை)

Image
அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை) -------------------------------------------------- அந்த இடம் எனக்கு ஹோமகுண்டம் என்றே தோன்றும். அதுவும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில். இடத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயரும் பொருத்தமே. இறுதியாய் உடல் மண் நீரில் கரையும் இடம். ராமேஸ்வரக் கடல் அலைகளற்றது. ஆனால் இது அப்படியல்ல. சதுரமாய் செங்கற்களை அடுக்கி நிறுத்தப்பட்ட இடுப்பு உயரச் சுவர்கள். அதற்குள் ஒரு சதுரமான உள்க்கூடு. மரக் கரண்டிகள், சில்வர் கிண்ணங்கள், ஓயாமல் பாத்திரங்கள் வைக்கப் படும், எடுக்கப் படும், , கழுவிச் சுத்தமாய் கவிழ்க்கப் படும் சத்தம். வெளியே சதுர மேஜைகளில் நின்றிருப்போர், இடம் தேடி அலைபவர்கள், எதுவும் அறியாமல் அமர்ந்து ஹோதாவில் மூழ்கியிருப்போர். இடைவிடாமல் உள்ளே நுழைந்தபடி இருக்கும் கார்கள், இறங்கியதும் பதறி அடித்து வரிசைக்கு ஓடுபவர்கள், கோதாவில் இடம் தேடச் சுற்றுபவர்கள். பல்லாயிரம் பேச்சொலிகள் கலந்து புது மொழியாய் விண்ணில் ஏறி கூரையை முட்டி, கீழே இறங்குகின்றன. அங்கே நடுவில் வயிறென இருக்கும் இடத்தில் கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே என்று பக்கமெல்லாம் கிளைத்து எழும் நெருப்பு. நெருப்பை ஏற்...

பஷீரின் பசியும் , என்னுடைய பசியும்

Image
பஷீரின் பசியும் , என்னுடைய பசியும் ------------------------------------------------ சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தாமதமாகி விட்டது. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். சாப்பிட்டது செரித்தது தெரிந்த பின் அடுத்த வேளை உண்பவன் உடலுக்கு மருந்து வேண்டாம். செரித்ததா என்று எப்படி அறிவது? காலை எழுந்ததும் முதல் ஏப்பம் உணவின் மணத்துடன் வராமல் இருப்பது என்னுடைய அறிகுறி. மறுநாள் அப்படி ஆகி விட்டது. பல்லைத் தேய்த்துப் பின் அரை மணி மெதுவாய் ஓடினால் சரியாகும். ஆனால் நேரமில்லை. குற்ற உணர்ச்சியில் நேற்று பகலில் உண்ண வேண்டாம் என்று முடிவு செய்தேன். வண்டி போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு நாள் பட்டினி போடலாம் என்று தோன்றியது. திங்கள் கிழமைகளில் பொழுது வேகமாக ஓடிவிடும். அன்று ஒரு மணியில் இருந்து மூணு வரை தொடர் மீட்டிங்காகப் போனது. ஒரு மணி வரை எப்போதும் போல் கடுங் காப்பியில் உப்புப் போட்டுக் குடித்தேன். மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் நிதானமாய், பட்டினியைப் எப்படி சரியாகச் செய்வது என்று படித்துப் பார்த்தேன். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உப்புகள் குறையும்போது மூட்டுகள் உளைய...

படிக்காத புத்தகங்கள் - tsundoku

Image
படிக்காத புத்தகங்கள் - tsundoku ------------------------------------------ வீடு ஓசூர் முனைக்கு நகர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. நேற்று எல்லோருமாய்ச் சேர்ந்து ஓசூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம் . பத்து நாள் நடக்கும், நேற்று இரண்டாவது நாள். கேரட் & ஸ்டிக் பாலிசி இல்லை, கேரட் பாலிசி. போன வருடம் போனதும், சாப்பிட்டதும் பையனுக்கு நினைவிருந்தது. இந்த வருடம் அவனே 'எப்பப் போலாம்' என்று கேட்டான். கால்பந்து புத்தகம் தேடிப் பார்த்தான். சிக்கவில்லை. இரண்டு மணி நேரம் சுற்றி பத்துப் புத்தகங்களுக்கு மேல் வாங்கினேன். பாராவின் கதைசொல்லலில் மயங்கி பஷீரின் தொகுப்பு ஒன்று. என்னுடைய குறிப்பு எழுதும் திறமையைக் கூர்படுத்த, அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள், வியாசனை அறிதல் போன்ற எப்போ படித்து நழுவிவிட்ட கட்டுரைகளின் புத்தக வடிவம், போன்றவை நினைவில் வருகின்றன. அவளும் ஒன்றிரண்டு வாங்கினாலும் , வைக்க எங்க இடம் இருக்கு என்று கேட்டுக் கொண்டே வந்தாள். இந்தக் கேள்வியில் மறைந்திருப்பது, எல்லாம் என்று படித்து முடிப்பது என்பதும். இது எனக்கும் இப்போதெல்லாம் குத்தலாகவே இருக்கிறது. பாதிக்கு மேல் பட...

ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு

Image
ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு --------------------------------------------------- ஓட்டுநரின் இருக்கை -1 பச்சை விளக்கு படம் ஒரு ரயில் டிரைவரின் கதை. சிவாஜி நடித்து, பீம்சிங் இயக்கியது.  ஏ.வி.எம் சரவணன் ரயில் டிரைவரை மையமாக்கி ஒரு கதை எடுக்க விரும்புகிறார். பெயர் அகப்படாமல் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போது, தி.நகர் ரயில்வே ஸ்டேஷனைக் கடக்கிறார். அங்கு பச்சை சிக்னலைப் பார்த்ததும் டைட்டில் தோன்றி விடுகிறது, பச்சை விளக்கு.  சிவாஜி , SSR,  அண்ணன் தம்பிகள். சௌகார் , விஜயகுமாரி. இந்த வரிசையில் யாருக்கு யார் ஜோடி தெரிந்திருக்கும். கதைச் சுருக்கம் இப்படிப் போகும். அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விடுவார். வளர்ப்பு அம்மாவும் இறந்து விடுவார். அவருக்கு மகள் விஜயகுமாரி. நாயகன் ஏழ்மையும் நோயும் கூடப் பிறந்ததா என்ற கேள்வி எழுந்து, தங்கையை டாக்டர் ஆக்க  அண்ணன்  சபதம் செய்கிறார். அண்ணன் ரயில் டிரைவர். சூழ்ச்சிகளுக்கு, இன்னல்களுக்கு நடுவில் படித்து ஒரு ஏழை டாக்டராகிறார். ஒளிமயமான எதிர் காலம். தங்கைக்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்ததும் அவர் பாடும் பாட்டு இது. கண்ணதாசன் வரிகள்....

கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை   நல்ல எழுத்தாளன் எருமை மாடாய் இருக்க வேண்டும் என்று பாரா சொல்வார். என் அப்பா வார்த்தைகள் இல்லாதபோது எருமைப் பால் குடிச்சியா என்று திட்டுவார். இன்றும் பிள்ளைகளை அவள் எருமை என்றே திட்டுகிறாள். எருமையைக் காலன் என்றனர் பெரியவர்கள். பொறுமை, பலம், காலம் என சொல்லனைத்தும் ஏற்று ஒன்றும் தெரியாதது போல் நிற்பது எருமை. மேற்கிந்தியத் தீவு அணியை எருமைகளின் கூட்டம் என்றே சிறுவயதில் பட்டிருக்கிறது. அவ்வாறென்றால் அதன் மேல் அமர்பவன் காலன். அவர்தான் கேரி சோபர்ஸ். எதிராளிகளுக்கு காலத்தை உணர்த்தியவர். ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கால விரிப்பில் எதிரணியினரை சுருட்டி மடக்கியவர்கள் இவர்கள் பவுலர்கள். தூக்கிய காலரும், கழற்றிய பட்டன்களுமாக, பேட்ஸ்மேன் களத்தில் இறங்கும் போதே, எதிரணி பந்து வீச்சாளருக்கு கிலி ஏறி விடும். சோபர்ஸ் பற்றிய என் மெட்ராஸ் பேப்பர் கட்டுரை இங்கே. https://madraspaper.com/cricket-gary-sobers/