இயற்கையை அறிதல் - எமர்சன் - 1
இயற்கையை அறிதல் ---------------------------- இது இயற்கையை அறிதல் என்ற எமர்சனின் ஏழு கட்டுரைகளை அடைப்படையாகக் கொண்டது. பல முறை வாசித்த பின், சமீபத்தில் புரிந்தது என எண்ணினேன். பின்னர் புரிதலுக்காகத் தமிழில் மொழிபெயர்த்தேன். வரிக்கு வரி இல்லாமல் , நிறையவும் குறுக்காமல், புரியும் வகையில் எழுதப்பட்டது. [அடைப்புக் குறிக்குள் வருபவை நான் எழுதியவை, எமர்சன் மேல் பழி சேராது ] இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு, கலை என்றால் என்ன, படைத்தல் என்றால் என்ன, மொழி என்பது என்ன போன்ற அடிப்படைக் கேள்விகளை கேட்டு விடை சொல்கிறது. இயற்கை மனிதனை மேம்படுத்தவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது. அதுவே நம் இருப்பின் குறிக்கோள் என்று எமர்சன் சொல்கிறார். அவர் சொல்லும் இயற்கை என்பது வேதாந்த மரபின் பிரம்மம் எனும் சொல்லாகவே எனக்குப் பட்டது. ஒவ்வொரு நாளும் நம் செவியில் விழும் சொல்லும் பொருளும் இயற்கையில் இருந்தே எழுகிறது. விசும்பு தோய் பசுங்களை, யானை வளைத்த மூங்கில் அது விடுகையில் விசும்பென எழுந்தது. இது குறுந்தொகை வரி. வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டதே; வானின் நீலம் அதில் ஒட்டிக் கொண்டதே. இது இன்று காலை...