Posts

Translate

எதிர்பாராத சீர்திருத்தம் (சிறுகதை)

எதிர்பாராத சீர்திருத்தம் ---------------------------------- 'நேரமாச்சு ஆரம்பிச்சுரலாமா...இத முடிச்சு அவரு இன்னொரு இடத்துக்குப் போனும் ' மலர்விழி கையில் ஒரு பேப்பரை பிடித்து மைக்கை ஆன் செய்து மேடை முன் வந்தார். தி.க அலுவலகத்தில் பெரியார் மணியம்மை திருமணப் பிரிவுக்கு பொறுப்பாய் இருப்பவர்.  முன்னெல்லாம் கருப்புச் சேலை அணிவார். இன்று கருப்பு சுடிதார் அணிந்திருந்தார். இதுவரை இப்படி பல ஆயிரம் கல்யாணங்கள் நடத்தி வைத்திருப்பார். இது மரபான கல்யாணம் இல்லை. விரும்பிச் செய்தது என்று அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 'சுப்பிரமணியன் சங்கரநாராயணன் மற்றும் சோபியா கிரேஸ் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கல்யாணம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும்.  மூத்த பத்திரிகைத் துறை நண்பர் அறிவழகன் சுயமரியாதைக் கல்யாணம்னா என்னன்னு சொல்லுவாரு...அப்புறம் கல்யாண ஒப்பந்தம்...அவ்வளவுதான்..திரு அறிவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்...' மேடையில் ஒரு சோபாவும் , அதை ஒட்டி இருபுறமும் ரெண்டு ஜோடி நாற்காலிகள் இருந்...

மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா - நினைவுப் பதிவுகள்

Image
மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு விழா - நினைவுப் பதிவுகள் ---------------------------------------------------------------------------- இரவுப் பயணம் முடிந்து, குளித்துவிட்டு நேரத்துடனேயே புறப்பட்டுவிட்டேன். தேவநேயப் பாவாணர் அரங்கம் எங்குள்ளது என்று விசாரித்தேன். 'டிஸ்ட்ரிக்ட் லைப்ரரி' என்று கேட்டுப் பார்த்தேன். டீக்கடை முதலாளி, மாஸ்டர், பேருந்தின் நடத்துநர் என்று யாருக்கும் அந்த இடம் தெரிந்திருக்கவில்லை. 'ஆனந்த் தியேட்டர்' என்றதும் நடத்துநரே, "ஆயிரம் விளக்கு நிறுத்தம்" என்றார். ஆறும் எட்டும் பதினான்கு ரூபாய் பயணக் கட்டணம். சந்தோஷமாக இருந்தது. வடபழனி சரவண பவனில் காபி குடித்தேன். ஊழியர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். கடைக்கு இது இறங்குமுகம் போல. பின்னால் தெரிந்த வடபழனி முருகனை எட்டி மட்டுமே பார்க்க முடிந்தது. நேரமில்லை. அரங்கில் நுழைகையில் விழா ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ரொம்ப சாதாரணமாக பாரா (பா.ராகவன்) நடமாடிக்கொண்டிருந்தார். அடையாளம் சொல்லி என்னை அறிமுகம் செய்துகொண்டேன். 'நினைவிருக்கு... நமக்கு ரெண்டு முத்து. நீங்...

மல்டி டாஸ்கிங் சாத்தியமா? - முழுமையறிவுக் காணொளி

கீழே வருவது இந்த முழுமையறிவுக் காணொளியைப் பார்த்ததும் எழுதிய மனப் பதிவு. எழுதி வைத்தாலாவது செய்யலாம் என்ற நம்பிக்கை. இல்லை, இதுவும் மனதைக் கடந்து காற்றாய்ப் போய்விடும். மல்டிடாஸ்கிங் என்பது கணிப்பொறிச் சொல். கணினியில் அப்போதெல்லாம் ஒரே ப்ரொசெஸர். விண்டோஸ் போன்ற செயலிகள் வந்தபோது, பல செயல்கள் செய்வது போல் பயனருக்கு தோற்றம் கிடைத்தது. ஆனால் உண்மையில் நேரத்தைச் சிறு கூறுகளாகப் பிரித்து, ஒன்றை சபையில் ஏற்றி, இன்னொன்றை இறக்கி செய்வதற்கு மல்டிடாஸ்கிங் என்று பெயர். இப்படி விரைவாக, நொடிக்கும் கீழே விரைவாய் , செயல்களை நிறுத்தி, பின்னால் இன்னொரு செயல் செய்து, பழசைத் தொடர காண்டெக்ஸ்ட் ஸ்விட்சிங் முக்கியம். அதை மட்டும் எழுத தனி நினைவிடங்கள் உண்டு. அந்த அளவு அது முக்கியம்.  பிடிபடாவிட்டால் மேலே படியுங்கள், கடைசியில் நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். https://www.youtube.com/watch?v=Wx80q18NbqM மல்டி டாஸ்கிங் சாத்தியமா? இல்லை. மல்டி டாஸ்கிங் அபத்தம். மனம் ஒன்றில் குவிதல் என்பதே செயல்.  மூளை திரவம் போன்றது. நாளில் பல வடிவம் எடுத்தே பயனுள்ளதாக ஆக முடியும். மூளையைக் குவித்து சாவியாய...

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி

Image
ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி  -------------------------------------------------- பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும். எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு. புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது. இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழ...

ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில்

Image
ஆப்பிள் கட்டி எழுப்பிய கோயில்  ------------------------------------------- என்றோ ஆதி மனிதனின் காலில் ஒரு கல் இடறி வந்த ரத்தமே அந்தக் கல்லின் மேல் நெற்றிப் பொட்டாய் மாறியது. ஆதிமனிதன் ஒருவன் தன்னைக்  கீழே வீழ்த்திய அந்தக் கல்லே, மனிதன் வியந்து என்ன என்று கேட்ட இடமே வழிபாட்டின் முதல் படி. அன்று முதல் இன்று வரை மனிதனின் கால் இடர்களும் , கேள்விகளும் முடியவே இல்லை. ஆனால் ஒன்றுண்டு, மனிதன் வியக்கும் எல்லாமும் கடைசியில் வழிபாட்டில் தான் போய் முடிகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அருகிலிருக்கும் சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். சாயங்காலம் அந்திப்பொழுதில் மலைமேல் ஏறி ஊரைப் பார்க்கும் போது , ஓசுர் LED டாஷ்போர்டைப் போல் தோன்றியது. விளக்குகள் மின்னியும் அணைந்தும் , சில இடங்களில் மின்மினி போல் பறந்தவாறும்,சில இடங்களில் நின்று அமர்ந்து யோகியைப் போல் நின்று எரிந்தும் , சில இடங்களில் காரிருளும் அந்த ஒளியால் துலங்கின. உள்ளே பிராகாரத்தில் இருந்த மூன்று சிலைகளை ஊன்றிக் கவனித்தேன். ஒன்று யமனின் சிலை. யமன் இறப்பின் உருவம். வலக்கையில் பாசக்கயிறும், இடக்கையில் காகமும், காலத்தின் கருமையான எரும...

எல்லோரும் இந்நாட்டு...

Image
எல்லோரும் இந்நாட்டு...  ------------------------------- பலவருடங்கள் முன் படித்த தேசாந்திரி புத்தகத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிட்டி பஸ் மாறி மாறி சென்னை வரை போய் வந்ததை ஒரு அனுபவமாக எழுதியிருப்பார். இவ்வகைப் பயணம் எனக்கு மிக இஷ்டம். இப்போது என்றாவது தோன்றி கட் ஜர்னீ  செய்வதுண்டு. வேடிக்கை பார்த்தபடி போகலாம்.  மெட்ரோவில் நேற்று ஒரு குடும்பம். குட்டி அக்கா, கைக் குழந்தை தம்பி, அவர் அம்மா. தம்பி விரல் சூப்பி இரு கைகளிலும் வார்னிஷ் பண்ணி வைத்திருந்தார். இன்னும் வாய்க் கூழின் மீதம் வாயில் ஒட்டி இருந்தது. அக்கா அம்மாவிடம் தம்பியை வாங்கி, ரயில் கண்ணாடி பார்க்க திருப்பி நிறுத்தினார்.தம்பி கன்றென பலமுறை அவள் கைமீறிச்  சந்தோஷத்தில் எம்பிக் குதித்தார். நீல வானமும், சுழலும் மரங்களும், உயர்ந்த கட்டிடங்களும் அவரை ஆச்சரியப் பட வைத்தன. அக்கா 'சூடு, சூடு, எட்ல போசுந்தி சூஸ்திவா....சூஊஊஊ அட்ல..எட்ல எட்ல சொப்பு..' என்றார். தம்பி பல  முறை அவர் வாய் பார்த்து முடிவில் 'சூஊஊஊ' என்றார். விஷயம் என்னவென்றால் நேற்று சென்னை வரை பேருந்துகளில் போய் திரும்பி வந்தேன். சந்தாபுரா, அத்திப்பள்ளி, ஒசூர...

ஒரு யாசித்தல்

Image
ஒரு யாசித்தல் ------------------  என்னுடைய நடைபாதையில் எனக்கு அது முக்கியமான இடம். நான் இருக்கும் இந்தச் சாலை பத்து வருடப் பழக்கம். சாலையே இல்லாமல் இருந்த காலம் தொட்டு, இப்போது இரண்டு வழிச் சாலை வரை. வழியில் ஒரே ஒரு டீக்கடை. ஐயங்கார் பேக்கரி. நானே பார்த்து எத்தனையோ கை மாறியிருக்கிறது. இப்போது எதிரில் ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது. கிழக்கே இருக்கும் கடையைப் பார்த்து முப்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. கடைக்குப் பின்னால் ஓடும் சாலையில் இறங்கினால் கோபசந்திரா கிராமம். சுரைக்காய் , திராட்சைத் தோட்டங்கள் பார்க்கலாம். அதுவே எனது வழிப்பாதை. நான் இங்கே போகும் மாலை வேளைகளில் , எதிர் நிற்கும் புளிய மரத்தின் பின்னால் முழு வானமும் தெரியும். இதைத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தொடுவானம் வரை விண்முட்டும் கட்டிடங்கள் எதுவும் சூரியனுக்குக் குறுக்கே வராது. எல்லாம் தாண்டி பொன்னொளி புளியமரத்தில் விழும். இலைகள் நுனிகளில் தளிர் ஒளி கொள்ளும். நாளில் ஓரிரு முறையேனும் இங்கு வந்து போவது என் வாடிக்கை. தலை பின்னிக்  கொண்டை முடிந்த பையன் பல வருடங்களாக ...