Skip to main content

Posts

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத்  தொடங்கியவர்.  தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு  இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2

  பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2 பெங்களூரில் நிறைய கேட்கநேரும் ஒரு பெயர் கெம்பே கவுடா என்பது. மைய பேருந்து நிலையத்தின் , விமான நிலையத்தின், ரயில் நிலையத்தின் பெயர் எல்லாமே ஒன்றே தான் . வீட்டை விட்டு வெளியேறி இவர் சிலையை பார்க்காமல் வீட்டிற்குள் உள்ளே வர முடியாது. சட்டசபையின் முன்னே வாள்பிடித்து , நடக்கும் குதிரையில் அவர் அமர்ந்து செல்லும் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது. புரவி நிலம் பார்த்து வல முன்கால் ஊன்றி , பின்னங்கால் அழுத்தி உயர்ந்தும், இடமுன்கால் காற்றில் எழுந்து, இடப்புற பின் கால் நன்றாய் ஊன்றி , ஒரு அபாரமான ஸ்னாப் ஷாட், சிலையில் வடித்தது. அவர் முகமும் கண்களும் எங்கோ வெளியைப் பார்த்து இருக்கும். கையில் தாளப் பிடித்த வாள் . சாந்த மூர்த்தம் என்று தான் சொல்ல வேண்டும்.   பெங்களூருக்கு இரண்டு தலபுராணங்கள்.   முதலாவது, ஹொய்சாள வம்சத்தை துவக்கிய வீரவல்லாளர் வேட்டையின் போது களைப்பாகி இன்றைய எலகங்கா வேளாண்மைக் கல்லூரி உள்ள இடத்தில் உணவு தேடி தனியாக ஒரு குடிசையில் நுழைந்தார். ஒரு வயதான பாட்டி வீட்டில் ஏதும் இல்லாமல் அவித்த வேர்க்கடலையை அரசனுக்கு அளித்தார். பசிக் ...

விண்ணில் ஒரு பறவை

விண்ணில் ஒரு பறவை  நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது.  அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார். சாரு அ...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1 மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம்.  ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலம...

அடுத்த மூச்சு -2 - சீ... ஓட்டம்

https://muthuvishwanathan.blogspot.com/2022/12/blog-post_28.html மெது ஓட்டம் பற்றி மேலே இருக்கும் முந்தய பதிவு எழுதியபின் , 2023 ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து முறை வீட்டிற்கும் கர்மேலராம் ரயில்வே பாலத்திற்கும் 10கே ஓடிப்பார்த்தேன். இது முடிவில் ஒரு மாதிரி எதிர் திசையில் முடிந்தது. விவரம் கீழே. இப்போது இன்னொரு ஒரு புதிய துவக்கம். அதன் விவரம் அதற்கும் கீழே. Nike ஆப் கோச்சுகள் காதில் பேசிக்கொண்டே வருவார்கள். நமக்கு முதல் எட்டு எடுத்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே தெரிவதால் , அறியாமலே கால் தயங்கும்.  கோச் காதில் தன் குலமுறைமைகள் எல்லாம் சொல்லி, (ஒலிம்பிக் பதக்கம் உட்பட),  'முதல் அடியே வெல்லும் அடி ; வென்றவர்கள் எல்லாம் முதல் அடி எடுத்து வைத்தவர்களே' என்பார்.  நீங்கள் ஆப்பை ஆன்  செய்து முதல் அடி எடுத்தது உங்கள் எண்ணத்தை காட்டுகிறது என்பார். நம் கால் இன்னும் நகராது. அப்புறம் நமக்குள் ஒரு பெரியவர்   'என்னப்பா இவ்வளவு சொல்றாரே..இன்னுமா விளங்கள' என்பார் . நாமே நினைக்காத ஒரு கணம் கால் நம்மை மீறிச் செல்லும். சரி ஒரு வழியாக கட்டு அவிழ்ந்தது.மெல்லிய சூடு நெற்றியில் படர ஆரம்பிக...

ஒரு சனிக்கிழமை காலை

ஒரு சனிக்கிழமை காலை இப்போதெல்லாம் சனிக்கிழமை காலை, வாரநாட்களைவிட இன்னும் முன் எழ வேண்டியிருக்கிறது. வேறு என்ன, ஸ்ரீக்கு கால்பந்து பயிற்சி. ஐந்தே முக்காலுக்கு பள்ளியில் இருக்க வேண்டும். எலீட் கோச்சிங் என்று சொல்கிறார்கள். கிளம்புவதற்கு முன் கோச் நரம்பு புடைக்க 15 நிமிடங்கள் நின்றபடி பேசிக்கொண்டு இருந்தார். கீழே பையன்கள் பெரும்பாலும் கைகள் முட்டியை கட்டியபடி படி இருந்தனர். சிலர் நெளித்துக் கொடுத்து, அடுத்து படுக்க வழி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வண்டியில் திரும்பி வரும்போது,  'கோச்சு ரொம்ப நேரமா பேசினாரே , என்னப்பா சொன்னாரு ?" 'அது தியரிப்பா ' 'அதான்ப்பா என்ன சொன்னாரு ?' 'டி பிரீபிங் ப்பா'  '...' 'என்ன நல்லா நடந்துச்சு , என்ன ட்ரபாக்ன்னு  டிஸ்கஸ் பண்ணனும்...நான் போன மேட்சுல எல்லாரும் உயரமா ஒருத்தன பாத்து பயந்தோம்ன்னு சொன்னேன்..அதான் தோத்தோம்ன்னு சொன்னேன்...கோச் ஆமான்னு சொன்னாரு   ' 'பேச்சு சரி ...நல்லா ஓடி விளையாடணும்ப்பா...இடுப்புல கை வைச்சு நடுவுல நின்னுக்கிட்டே இருக்கக்  கூடாது... ' 'ஆமப்பா ...தியரிய விட ப்ராக்டிகல் த...

புளியுப்புக் கரைசல்

வெண்முரசு நீர்க்கோலம் படித்துக்கொண்டிருக்கிறேன். பாண்டவர்களின் விராட பருவமும் , நள தமயந்தி கதையும் பிணைந்து சென்று கொண்டிருக்கிறது.  நளனை பீமன் பாதி , தருமன் பாதி என்று எண்ணிக்கொண்டேன். எவ்வாறு பிறர் அறியாமல் மாறுவேடம் பூணுவது என்றபோது , தமனர் அவர் முனிநிலையில் பாண்டவர்க்கு சொல்லும் சொற்கள் மிக ஆழமானவை. மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவர முடியுமா? உள்ளம் மாறாமல் உடல் மட்டும் மாறினால் ஆகுமா?  நம் ஒவ்வொருவரிலும் பல ஆளுமைகள் குடிகொண்டுள்ளன. நாம் நாமாகவே ஒன்றை மட்டும் எழுப்பி முன்னதாக வைக்கிறோம். மற்றவைகளின் மேல் அது ஏறி அமர்ந்து கொள்கிறது. நம் உடலும் உள்ளமும் அதுவாகவே ஆகிறது. எனவே , மாறுவேடம் பூண வேண்டியபோது, நமக்குள் பின்னால் இருக்கும் ஆளுமையை முன்னால் எழச்செய்தால் நடிக்க வேண்டியதில்லை. அது உள்ளே இருப்பதால்  பயிலவும் வேண்டியதில்லை.  இன்னும் மேலே சென்று , அடுத்தவரை தனக்குள் கீழே ஆழத்தில் புதைபட்டுக்கிடக்கும்  ஆளுமையை வாயால் சொல்ல வைக்கிறார். பீமன் விராடபுரியில் அரண்மனைத்  அடுமனைத் தலைவனாகிறான்.  திரௌபதி தருமனை சகுனி என்கிறாள் . தருமன் அவளைச் சேடி என்கிறான...