Skip to main content

Posts

சைக்கிள் பதிவுகள் -8 - சருகின் எடை

சருகின் எடை  இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு  உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார்  ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?   //  ‘வானே புக்கான் அரும் புதல்வன்’  மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித்  தோன்றியதாக  கம்பர் எழுதுகிறார்.  மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.  நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்  சைக்கிள் மிதித்துச் செல்லும் போது காதில் எதாவது ஓடிக்கொண்டே இருந்தால் தூரம் தெரியாது. ஏதவாது போட்காஸ்ட் அல்லது பாடல்கள். ஒரு சில நாள்களில் வெறும் வேடிக்கை அல்லது அன்றைய யோசனை. பாடல் என்றால் ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல்களுக்குள் இடம் வந்துவிடும். பொதுவாக ஒரு தேடல் போட்டு, வேறு யாரோ ஒருவர் பதிவிட்ட பிளே லிஸ்டை சீரற்ற வரிசையில் கேட்பது என் வழக்கம்கே. எதோ ஒரு பாடல் அல்லது ஒரு வரி நாளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.   அன்று டி.எல். மகாராஜன் பாடிய காதல் யோகி யோகி என்ற பாடல் வந்தது ( https://www.youtube.com/watch?v=mwIS_fZ2mRc ). பரணில் ஏறி ஏதாவது எடுக்கும் போது , வேறு எதாவது தட்டுப்பட்டு நினைவுகளை இன்னும் பின் தள்ளுவது போல. தாளம் (taal ) 1999-ல் வெளிவந்தது. முதலில் ஹிந்தியில் , பின்னர் தமிழ் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு வெளி வந்தது. ரஹ்மானின் இசையில் பாடல்களுக்காவே பிரபலமானது. தமிழ் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்ப்பை பெற்றன. நான் கல்லூரி  படிக்கும் நேரத்தில் ஒன்று இதை விசிடி (திருட்டு) அல்லது ஊபர் கட்டிய ஒலிப்பெட்டிகளிலோ கூடிக் கேட்பார்கள். மேலும் ...

வீட்டிற்குள் ஒரு அழுத்தம்

வீட்டிற்குள் ஒரு அழுத்தம் ஒன்றைக் கேட்பது என்பதும் ஒரு கலை தான். கேட்பது என்பது எப்போதும் எனக்கு ஒரு சிக்கல். ஆனால் நமக்கில்லாததை ஒருவாறு கேட்க முடிகிறது. குழந்தைகளுக்கு இந்தத் தடை இருப்பதில்லை. குழந்தைகளில் கொஞ்சம் நாசுக்காக கேட்பது என்பதை பார்ப்பது அரிது. ஸ்ரீ இதை எல்லாம் தாண்டியிருக்கிறார் இப்போது. ஒரு ஆறு ஏழு வயது வரை எதுவுமே கேட்க மாட்டார். இவரது அக்காவை வைத்துப் பார்க்கும் போது , இது எங்கிருந்து வந்தது என்று தோன்றும். ஏதாவது புத்தர் , ரமணர்  தோன்றியிருக்கிறாரா என்று நினைத்ததுண்டு. இவருக்கு ரமணர் என்று ரெண்டாவது பெயர் (என்னால் ) போடப்பட்டுள்ளது என்னை மேலும் சிந்திக்க வைத்ததுண்டு. ஆசையெல்லாம் விட்டுவிட்டு பூமியில் இறங்கியிருக்கிறாரோ என்று தோன்றும். எவ்வளவு பெரிய கடைக்குள்  சென்றாலும், பொம்மைகள், கார்களின் நடுவே நின்று கொண்டு ' எனக்கு எதும் வேண்டாம்ப்பா ' என்று சொல்லிவிடுவார். ஓட்டலில் யார் என்ன சாப்பிட்டாலும் இவர் இரண்டு இட்டிலி மட்டும் உண்பார். அந்த இனிக்கும் சாம்பார்க்ககவே உண்பார். பூச்சிகள் நழுவி தேனில் விழுந்து இறப்பது போல் , இட்டிலியெல்லாம் சாம்பார் கிண்ணத்தில் மரணம் ...

தொடக்கம் , அ.முத்துலிங்கம் சிறுகதை

பெங்களூர்- ஹைதராபாத் சாலையிலோ அல்லது பெங்களூர் -கிருஷ்ணகிரி சாலையிலோ இருக்கும் ஒரு பீடபூமியை  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நெடுஞ்சாலையின் மிக உயரமான மேடு தெரியும் வண்ணம் கேமரா நிற்கிறது. இப்போது மாதவன் ஒரு ஸ்ப்ளெண்டர் மோட்டார் வண்டியில் , கண்ணளவே உள்ள கறுப்புக் கண்ணாடியுடன் , நீல நிற டெனிம் சட்டை ,  காதுகளில் இயர் போனுடன் பிரேமுக்குள் நுழைகிறார். காதுகளுக்குள் ஒலிக்கும் இசை அவர் முகபாவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உதடு இரண்டும் குவிகிறது, பின் பல் காட்டி சிரிக்கிறது. நமக்கு கேட்குமாறு என்றென்றும் புன்னகை என்று பாடல் ஒலிக்கிறது . அடிக்கடி அவர் முகம் பிரேமில் இருந்து மறைந்து மீண்டும் உள்ளே வருகிறது. கேமரா நின்ற இடத்திலே நிற்கிறது. கானல் பிம்பம் தெரிவது போல் பிசுபிசுத்து மீண்டும் தெளிவாகிறது. நடுநடுவே டைட்டில் கார்டுகள் வந்து விழுகின்றன. இது மணி ரத்தினத்தின் ஒரு படத்துவக்கம். இவ்வாறு இன்றும் நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் கணக்கற்றவர்களின் கூட்டு உழைப்பால், மிகுந்த பொருள் செலவில் உருவாகும் ஒரு திரைப்படம், முதல் சில மணித்துளிகளில் , ஒரு ஸ்குரோல் செய்த...

இவர் வெளியில் இருக்கிறார்

இந்த வாரம் மதுரை வாசம். வழக்கமான நடைக்குமுன் செய்யும் வாய் வழி (டீக் கோப்பை ) 'வார்ம் அப்பின்' போது , எதிரே தலை உயர்த்திப் பார்த்த போது இவர் கண்ணில் பட்டார். கண் தானாக நிலை கொண்டது. ஒரு கணம் P.H. பாண்டியன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அதுவும் ஒரு கடை முன்னே, இல்லை ஒரு மூடிய கடை முன்னே, இல்லை பல நாள் மூடிக்கிடக்கும் ஒரு கடை முன்னே.  சென்ற வாரம் திருநெல்வேலி பக்கம் செல்லும்போது P.H. பாண்டியன் என்ற பெயர் ஒரு போஸ்டரில் கண்ணில் பட்டது. உள்ளே ஊறிக் கொண்டிருந்திருக்கிறது. இது இந்தப் பகுதியின் பிரதான கடைப்பகுதி. ஒட்டுமொத்தமாக ஒரு layout என கற்பனை செய்யலாம். ஆனால் நகரப் பேருந்துகள் உள்ளே வரும். எட்டு நிறுத்தங்கள் மொத்தம். பிரதான சாலையில் இரண்டு, உள்ளே ஆறு. 4,6,7 -ல் வண்டி நிற்காது. மீதத்தை மூளை வேலையாக கொடுக்கிறேன். ஒரு பகுதியில் ஒன் வே இருக்கிறது. மக்கள் அதிகமாகும் போது வண்டிகள் ஒதுங்கியே சென்றாக வேண்டும். மக்கள் அதிகமானால், வேறென்ன,  கடைகள்.  ஒரு மூன்று டீவி பழுதுபார்க்கும் கடைகள் உள்ளன. பகலில் ஒருவர் பின் பகுதியை கழற்றி வைத்து இன்னும் ஏதோ செய்து கொண்டுதான...

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 2

உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 தாமஸ் கோவன் Four Fold Path To Healing என்னும் நூலில் இதயம் ஏன் ஒரு மோட்டார் பம்ப் இருக்க முடியாது என்பதற்கான வலுவான கேள்விகளை எழுப்புகிறார். இந்த ஊகத்தை முதலில் முன்வைத்தவராக ருடோல்ப் ஸ்டெய்னர் என்பவரைக் குறிப்பிடுகிறார். நம் உடலின் ரத்த ஓட்டம் என்பது ஒரு வட்டப் பாதையில்  ( closed loop ) நடப்பது. இதயத்தின் நீளம்  12 செமீ , அகலம் 6 செமீ, சுமார் 300 கிராம் எடை உள்ளது. ஒட்டுமொத்த உடலை வைத்துப் பார்க்கையில், குறுக்குவெட்டில் இந்த இடம் மிகச்சிறியது. இந்தச் சிறிய இடத்திற்குள்ளிருந்துதான் ரத்தம் மேலேயும் , கீழேயும் கடைசி வரை செல்வதற்குமான அழுத்தத்தைப் பெற வேண்டும். இதயத்தில் இருந்து வெளிவரும் ரத்தம், சிரைகளில் கீழ்நோக்கி பயணிக்கிறது. இங்கு இவை பல கிளைகளாக பிரிந்த வண்ணம் சென்று இறுதியில் ரத்த நாளங்களாய் முடிந்து பிராணவாயுவையும் , உணவின் சத்துக்களையும் திசுக்களுக்கு கடத்துகின்றன. ரத்த நாளங்களின் குறுக்கு வெட்டு பரப்பு இதயத்தை விடப்  பெரிது. ஒரு மூன்று கால்பந்து மைதானமாக நாளங்களை விரிக்கலாம். சத்துக்களைக் கடத்தியபின் உடலின் மேல்ந...

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ...

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ... சென்ற வாரம் இருந்த மாலை நேர சந்திப்பால் சைக்கிளை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வீடு வர வேண்டியதாகிவிட்டது. திரும்ப வந்து இன்னும் கொஞ்சம் இழுவல் இருப்பதால் பொட்டல் கடந்து, புழுதி கடந்து, தரிசு கடந்து வந்து சேர நேரமாகிவிடும். கார் ஆட்டோ என்றால் பரவாயில்லை. சரி ,  இதுவும்  சில நாள்களில் நடப்பதுண்டு.   ஆனால் திரும்ப வாகனம் இல்லாமலே அடுத்த  நாள் சென்று, சைக்கிளை எடுத்து மாமூலாக்க வேண்டும். காலையில் பொதுவாக ஆட்டோ , கார் கிடைக்காது. இன்றும் அப்படித்தான்.  வீட்டில் இருந்து  கொஞ்சம் நடந்து சென்று MG ரோடு செல்லும் புதிதான வோல்வோ பஸ் பிடித்து , வழியெல்லாம் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படித்து, மாயோ ஹால் வந்ததும் இறங்கி , அங்கிருந்து கப்பன் பார்க் ஓரமாய் ஒரு அழகிய காலை நடை நடந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. காதல் தேசம் அப்பாஸ், வினீத் போல , கல்லூரி சாலை  என்று ஒரு நோட்டு மட்டும் இருந்தால் , வானில் சுழற்றி கீழே வரும் போது பிடித்து நடக்கலாம். (இன்றைய நிலவரம் யார் எப்படி எனத் தெரியவில்லை.  இன்றைய கல்லூரி ட்ரெண்ட் கப்பன் ப...